துணி
______
மதத்தின் பெயரால் கலவரம் செய்து ஆயிரக்கணக்கான அப்பாவிகளை எரித்த நாட்டில்!
சாதியைக்காட்டி கூலியைக் கேட்ட அப்பாவிக்கூலிகளைக் குடிசையோடு எரித்த நாட்டில்!
பேருந்தோடு மாணவிகள் மூவரையும் அரசியலுக்காக எரித்த நாட்டில்!
கருத்துக்கணிப்புக்காக பத்திரிக்கை அலுவலகத்தோடு பணியாளர்கள் மூவரையும் எரித்த நாட்டில்!
அலட்சியத்தால், லஞ்சத்தால் பள்ளியோடு எரிந்து போன 94 குழந்தைகளுக்கு சரியான நீதி கிடைக்காத நாட்டில்!
போதையிலே கார் ஏற்றி ஏழையைக் கொன்றுவிட்டு சட்டத்தை ஏமாற்றி தப்பிய சல்மான்கள் வாழும் நாட்டில்!
இன்னும் எத்தனையோ காரணங்களால்
இன்னுமும் எரிந்து மடியும் தேசபக்தர் வாழும் நாட்டில்!
நீ மனிதர்களை உயிர்கள் என்றெண்ணி விட்டுவிட்டாய்!
தேசதுரோகி என்றே பெயரெடுத்தாய்!
துணிந்து நீ
கொடி என்னும்
துணியை எரித்தாய்!
சாமானியன் மீது பாயும்
சட்டமுள்ள நாட்டில்!
நண்பன் ஸ்ரீஜி
No comments:
Post a Comment