Sunday 30 October 2016

Blog துவங்கும் முறை

How to Create Own Website for You?
1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.

2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள்.

3. கீழே more என்ற வார்த்தையை க்ளிக் செய்யுங்கள்.

4. ஆரஞ்சு நிற சின்னத்தோடு Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள்.

5.create your blog என ஆங்கிலத்திலுள்ளதை க்ளிக் செய்யுங்கள்.

6,create a new blog கீழ் Title என்னுமிடத்தில் எந்த தலைப்பின் கீழ் நீங்கள் செயல்பட விரும்புகிறீர்கள் என கொடுக்கவும். (இது இணைய முகவரி அல்ல.தலைப்பு மட்டுமே)

7.Address என்ற பகுதியில் வழங்க விரும்பும் முகவரியை கொடுக்கவும்.(இதுதான் நீங்கள் அனைவருக்கும் பகிரப் போகும் உங்களது ப்ளாக்கர் முகவரி. எல்லாம் small letters இடைவெளியின்றி தர வேண்டும்.என்ன வார்த்தை கொடுத்தாலும் அதன் பின் .blogspot.com என்பது default ஆக வரும் Example: (www.padasalai.blogspot.com). எனவே மிக எளிதாகத் தரவும்.

8.Template(எப்படி தோன்ற வேண்டும்) என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

9.create blog என்பதை க்ளிக் செய்யவும்.

10.இடது மூலையில் தென்படும் new post ஐ க்ளிக் செய்யவும்.

11.எழுதப் போகும் பதிவிற்கான தலைப்பை post title என்ற பகுதியில் கொடுக்கவும்.

12.compose பகுதியில் கீழ் தெரியும் பெரிய தாள் போன்ற பகுதிக்குள் மேல் கொடுத்த தலைப்பு தொடர்பான படைப்பை பதிவு செய்யவும்.

13.பதிவில் எழுத்துகளை பெரிதாக்க,சிறிதாக்க,தடித்த,சாய்ந்த எழுத்துகளை பயன்படுத்த, அவற்றின் நிறத்தை மாற்ற, அடிக்கோடிட, படங்களை,வீடியோக்களை இடைச் செருக, ஒரு இணைப்பை வேறொரு பக்கத்திலிருந்து இங்கே வழங்க- இது போன்ற செயல்களுக்கு நீங்கள் எழுத ஆரம்பிக்கும் இடத்திற்கு மேலே உள்ள விருப்பங்களிலிருந்து தெரிவு செய்து கொள்ளலாம்.

14.பதிவை முடித்த பிறகு பதிவு சார்ந்த குறிப்பினை வழங்க வலது பக்கம் தோன்றும் lables என்பதை க்ளிக் செய்ததும் தோன்றும் சிறிய பெட்டிக்குள் குறிப்பினை கொடுக்கவும். பின்னர் கீழே உள்ள Done என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்.

15,இறுதியாக Post Title க்கு வலது புறம் தோன்றும் Publish என்ற வார்த்தையை க்ளிக் செய்ய, உலகத்தின் எந்த இணைய இணைப்புள்ள ஒரு கணினியிலிருந்தும் உங்கள் ப்ளாக் முகவரி தெரிந்த எவரும் நீங்கள் எழுதியதை வாசிக்க முடியும்.

-முனைவர்.ஜெயபிரபு,பட்டதாரி ஆசிரியர்,தஞ்சாவூர்.

Saturday 29 October 2016

மாதசம்பள பட்டியல் தயார் செய்யும் முறை

#மாத சம்பளம் தயார் செய்யும் முறை:

மாத சம்பளம் தயார் செய்யும் முறை:
   ஒரு மாத சம்பளத்திலிருந்து அடுத்த மாத சம்பளம் தயார் செய்ய:

#Step:1                          
            www.epayroll.tn.gov.in என்ற இணயதள முகவரிக்கு செல்லவும்.
             தோன்றும் திரையில் D login-க்கான  User Name  மற்றும் Password  
              ஐடைப்  செய்து Login செய்யவும்.

#Step:2
              Bill Passing (DDO)-க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள
              Edit Installment என்பதை கிளிக் செய்யவும்.

#Step:3
             Do you want to edit installment Oct-2016 to Nov-2016?
             Yes   No என்பதில் Yes ஐ கிளிக் செய்யவும்.
             Edit Installment successfully ஆன பிறகு Logout செய்யவும்.

#Step:4
             பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான  User Name  மற்றும்
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும்.

#Step:5
             Bill Preparation (Jr.Asst)-க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல்
            உள்ள Pay Bill Reports என்பதை கிளிக் செய்யவும்.

#Step:6     
            Pay Bill Reports என்பதன் கீழ் வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation
            என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Select செய்து
            Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்த பின் OK
            கொடுக்கவும்.  

  #Step:7        
            Pay Statement என்பதை கிளிக் செய்து Bill Type-ல்  Bill  Select செய்து    
            Generate Report என்பதை கிளிக் செய்யவும். Generate ஆகும் Pay Statement
            ஐ download செய்து கொள்ளவும்.

#Step:8         
           Schedule என்பதை கிளிக் செய்து Bill Type-ல்  Bill  Select செய்யவும் பிறகு
           View Option-ல் All Schedule-ஐ Click செய்து பின்னர்   View Report  என்பதை
      கிளிக் செய்யவும். Generate ஆகும் Schedules ஐ download செய்து கொள்ளவும்.

#Step:9         
          ECS Report என்பதை கிளிக் செய்து Select Bill Type-ல்  Bill  Select செய்யவும்
         பிறகு Generate Report என்பதை கிளிக் செய்யவும். Generate ஆகும்

           ECS Report ஐ download செய்து கொள்ளவும்.

#Step:10
           
          Download செய்த Reports அனைத்தையும் ஒரு முறை பழைய  Bill உடன் 
சரிபார்த்துக் கொள்ளவும்.சரியாக இருப்பின் Bill Forward என்ற ஆப்ஷனை கிளிக்
செய்து Bill Select செய்யவும். எத்தனை Employees அந்த  Bill-ல் உள்ளனர்
என்பதை காட்டும்.அதை சரிபார்த்த பின்னர் கீழே உள்ள Bill Forward என்ற
பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out
செய்யவும்.

#Step:11        
             பின்னர் தோன்றும் திரையில் D login-க்கான  User Name  மற்றும்
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும். Pay Bill Reports  என்பதை  
            கிளிக் செய்யவும் அதன் கீழ் வரும்  ஆப்ஷன்களுள்  Bill Approval
            என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து  Bill Approval கொடுக்கவும்.     
           Bill Approved Successfully  என வந்த பின் Log Out செய்யவும்.

#Step:12
             பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான  User Name  மற்றும்
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும். Pay Bill Reports என்பதை         
            கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்து Select Bill
             Type-ல்  Bill  Select செய்யவும் பிறகு Generate Report என்பதை கிளிக்  
            செய்யவும். Bill Generate ஆன பிறகு  Download SES File  என்பதை கிளிக்
            செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்து கொள்ளவும்.
            பின் Log Out செய்துவிடவும். அவ்வளவு தான்  Bill Ready.

#குறிப்பு:
               Form 100 மற்றும் Certificate  ஆகியவற்றை தனியாக தயார் செய்து
கொள்ள வேண்டும்.

Saturday 15 October 2016

காப்ரேகர் மாறிலி 6174

எச்சரிக்கை: உங்களுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் சிறிதாவது ஈடுபாடில்லையா? தயவுசெய்து இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

'காப்ரேகர்' (Kaprekar) என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவரோ, வேறு தேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. இவர் ஒரு இந்தியர். மும்பாயின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். 'ராமச்சந்திர காப்ரேகர்' என்பது இவரின் முழுமையான பெயர். இவர் ஒரு கணித மேதை. மேற்குலகம் வியப்புடன் பார்க்கும் ஒரு ஆச்சரியமான கணிதவியலாளர். டிஜிட்டல் இந்தியா என்றதும் பரவசப்படும் இளைஞர்களில் பலருக்கு, மேற்குலகமே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்கள்பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லையென்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த அறிவியலாளர்களுக்கு அரசியலில் எந்தவொரு ஆளுமையும் இல்லாமல், அறிவியலில் மட்டும் ஆளுமை இருந்ததால், தன் சொந்த நாட்டில், சொந்த இடத்தில் மறக்கப்பட்டவர்களாகிவிடுகின்றனர்.

காப்ரேகர் கண்டுபிடித்த ‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers) என்பது கணிதத்தில் பிரபலமானது. உதாரணமாக, 703 என்பது ஒரு காப்ரேகர் எண்ணாகும். இதன் விசேசத்தன்மை என்னவென்றால், இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெரிய எண்ணை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால், ஆரம்ப எண் வரும்.  சரி இதைப் பாருங்கள்.

703X703=494209  அல்லவா?    இதில் வரும் 494209 என்பதை எடுத்து, அதை 494 மற்றும் 209 ஆகப் பிரியுங்கள். இப்போது, இவையிரண்டையும் கூட்டுங்கள்.
494+209=703. மீண்டும் ஆரம்ப எண்ணான 703 மீண்டும் வருகிறதல்லவா? எனவே 703 ஒரு காப்ரேகர் எண்ணாகும்.

இப்படி 9, 45, 55, 99, 297….. என்பவை வரிசையாக காப்ரேகர் எண்களாகும். நீங்களே இவற்றின் வர்க்கத்தை எடுத்துச் செய்துபாருங்கள்.

ஆனால், நான் இங்கு சொல்ல வந்தது காப்ரேகர் எண்களைப்பற்றியல்ல. காப்ரேகரின் புகழைச் சொல்வது, ‘காப்ரேகர் எண்கள்’ மட்டுமல்ல, ‘காப்ரேகர் மாறிலி’ (Kaprekar’s Constant) என்பதும்தான். 'காப்ரேகர் மாறிலி' என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு எண். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் ‘சுதாகர் கஸ்தூரி’ (Sudhakar Kasturi), '6174' என்று ஒரு அருமையான நாவலையும் எழுதியிருக்கிறார்.

அந்த எண் 6174.

'6174' ஒரு அதிசய எண். இந்த அதிசய எண்ணைக் கண்டுபிடித்தவர் காப்ரேகர். 'சரி இந்த எண்ணில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?' என்றறிய ஆவலாக இருக்கிறதா?
அதைப் பார்க்கலாம் வாருங்கள்……..

காப்ரேகர் சொன்னது இதுதான், "6174 என்னும் எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் இறங்குவரிசையாகவும், ஏறுவரிசையாகவும் வரும் எண்களாக மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் இறங்குவரிசை எண்ணிலிருந்து ஏறுவரிசை எண்ணைக் கழியுங்கள். அப்போது மீண்டும் அதே 6174 என்னும் எண் வரும்".

அது என்ன இறங்குவரிசை எண், ஏறுவரிசை எண்? பெரிய இலக்கத்திலிருந்து சின்ன இலக்கம்வரை வரிசையாக எழுதுவது இறங்குவரிசை எண். சின்ன இலக்கத்திலிருந்து பெரிய இலக்கம்வரை வரிசையாக எழுதுவது ஏறுவரிசை எண். அவ்வளவுதான். இதன்படி, 6174 இன் இறங்குவரிசை எண் 7641, அதன் ஏறுவரிசை எண் 1467.

காப்ரேகர் சொன்னதுபோல, இறங்குவரிசை எண்ணிலிருந்து, ஏறுவரிசை எண்ணைக் கழிப்போம்.

7641-1467=6174.

அதாவது 6174 என்னும் எண்ணின் இ.வ. எண்ணிலிருந்து, ஏ.வ.எண்ணைக் கழித்தால் அதே 6174 மீண்டும் வரும்.

இத்துடன் முடிந்துவிடவில்லை '6174' தரும் ஆச்சரியங்கள்.

நான்கு இலக்கங்களைக்கொண்ட எந்த இலக்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சரி, உதாரணமாக 8539 என்னும் எண்ணை எடுத்துக் கொள்வோம். அதை இ.வ.எ, ஏ.வ.எ என மாற்றிக் கழித்துக்கொள்வோம்.

9853-3589=6264

இப்போது 6264 என்பதை மீண்டும் இ.வ.எ, ஏ.வ.எ ஆக மாற்றிக் கழித்துக்கொள்வோம்.

6642-2466=4176 

இந்த எண்ணுக்கும் அதேபோலச் செய்தால்,

7641-1467=6174 

இறுதியாக நாம் பெறுவது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். இப்போது 6174 ஐ நாம் வரிசைப்படுத்தினால், அது 6174 ஆகவே இருக்கும். இந்த எண் மீண்டும் மீண்டும் நம்மை அதன் சுழலில் இழுத்துக்கொண்டிருப்பதால், இதைக் 'கருந்துளை எண்' (Blackhole) என்றும் சொல்வார்கள்.

நீங்கள் 9999 க்குக் கீழே உள்ள நான்கு இலக்கங்களைக் கொண்ட எந்த எண்ணை எடுத்தும் (1111, 2222, 3333.......9999 எண்களும், சில விதிவிலக்கு எண்களும்  இவற்றில் அடங்காது) அதனை இ.வ.எண், ஏ.வ.எண் ஆகப் படிப்படியாக மாற்றினால் உங்களுக்கு இறுதியில் கிடைப்பது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். அதிகப்படியாக ஏழாவது படியில் 6174 எண் உங்களுக்கு விடையாகக் கிடைக்கும். முடிந்தவரை பல எண்களை இப்படி முயற்சிசெய்து பாருங்கள். எப்போதும் 6174 என்னும் எண் வந்து உங்களை அணைத்துக் கொள்ளும். அதனால்தான் '6174' என்பதை 'காப்ரேகரின் மாறிலி' என்பார்கள்.

மூன்று இலக்க எண்களுக்கான காப்ரேகரின் மாறிலி எண் 495 ஆகும்.

என்ன புரிகிறதா?

நன்றி

Saturday 8 October 2016

முதுகு வலி குணமாக....

*முதுகுவலி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் வருகிறது.*👇🏿👇🏿👇🏿

வாகனம் ஓட்டுபவர்களுக்கு, கணினியில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு, அதிக எடைகளைத் தூக்கி பணியாற்றுபவர்களுக்கு, குதிகால் செருப்பு அணிபவர்களுக்கு என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது.

பொதுவாக முதுகுவலி ஏற்பட்டதும் அதற்கு சிகிச்சை செய்வதை விட, அது ஏன் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அதனை மாற்றுவதுதான் சிறந்த வழியாகும்.

எந்த மாற்றத்திற்குப் பிறகும் முதுகுவலி தொடர்ந்து கொண்டே இருந்தால் சிகிச்சை பெறுவது நல்லது.

முதுகுவலி உள்ளவர்கள் எடை அதிகமான பொருட்கள் எதையும் தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடை அதிகரிப்பதாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படுகிறது.

*முதுகுவலி ஏன் வருகிறது?*

நம் முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நழுவிவிட்டது (டிஸ்க் ப் ரொலாப்ஸ்) என்றால்தான் முதுகுவலி வருகிறது.
நம் முதுகெலும்பு 33 முள் எலும்புகளால் ஆனது. ஒவ்வொன்றிலும் ஒரு தட்டுப்போன்ற வட்டு உள்ளது. இந்த வட்டுக்களிடையே பசை போன்ற ஜெல் இருக்கிறது. இந்தப் பசைதான் முதுகெலும்பில் அழுத்தத்தைத் தாங்கவும் உராய்வைத் தடுக்கவும் உதவுகிறது.
சிலர் தவறாக ஒரே நிலையில் உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகெலும்புக்கு ஏற்படும் அழுத்தத்தால்தான் வலி உண்டாகிறது. இதன் அறிகுறியாக சிலருக்கு ஒரு காலிலோ இரு காலிலோ வலி இருக்கும். இடுப்பிலும் வலி தெரியும்.
இந்தத் தவறான நிலை பலநாள் தொடரும்போது ஏற்படும் அழுத்தத்தால் வட்டுக்களிடையே உள்ள பசை வெளியே வந்துவிடும். வெளிவந்த பசையானது மற்ற ஆதார உறுப்புகளுக்குச் செல்லும் நரம்புகளை அழுத்துவதால் கடுமையான வலியை உண்டாக்குகின்றது. இதைத்தான் டிஸ்க் நழுவிவிட்டது என்கிறார்கள்.

*யார் யாருக்கு முதுகுவலி வரும்?*

நீண்டதூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், அதிகநேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், ஒழுங்கற்ற படுக்கை, சிலவகை               மெத்தையில் (உ_ம்) ஃபோர்ம் மெத்தையில் படுப்பவர்கள்), சக்திக்கு மீறிய கனமான பொருட்களைத் தனியே தூக்குபவர்கள், எந்தப் பொருளை எப்படித் தூக்குவது என்ற விவரம் தெரியாதவர்கள், சரியாக, நேராக உட்காராமல் நீண்ட நேரத்திற்கு ஒரு பக்கமாகவே உட்காருபவர்கள், அல்லது நிற்பவர்கள், மெனோபாஸ் காலப்பெண்கள் ஆகியோருக்கு லேசு லேசாக ஆரம்பிக்கும் முதுகுவலி, கண்டு கொள்ளாமல் விட்டால் அதிக வலியாக மாறி விடக்கூடும். ஆண், பெண் இருவருக்கும் உடலின் எடை கூடுவதும் முதுகுவலிக்கு முக்கியக் காரணமாகும். கூடுதல் எடை முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வலி உண்டாகிறது. இதற்கு நடைப்பயிற்சி அவசியம். நடப்பது நம் முதுகு, இடுப்புத் தசைகளை உறுதியாக்கும்.

பெண்களுக்கு முதுகுவலி அதிகம் வருவது எதனால்?

பெண்களுக்கு மெனோபாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற்கும் சமயம்) காலத்தில் முதுகுவலி வருவதுண்டு. இந்தச் சமயத்தில் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறையும். இதனால்தான் வலி உண்டாகிறது. இதுதான் ஆஸ்டியோ ஃபொரோசிஸ் என்ற எலும்பு முறிவு நோய்க்கும் அறிகுறி.

இதைத் தடுக்க பெண்கள் மெனோபாஸ் சமயத்திற்கு முன்பே மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து பிஸிஜி (ஹார்மோன் ரீபிபோப்மெண்ட் தெரபி) சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

*முதுகுவலிக்கு குட்பை சொல்ல எளிய வழிகள் :*

1. படுக்கையில் கவனம் தேவை :
நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. ஃபோம் மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் ஃபோம் மெத்தையில்                                    படுக்கவே கூடாது. இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.

2. நீண்டதூர இரு சக்கரவாகனப் பயணத்தைத் தவிர்த்தல் :
நீண்டதூரம் இரு சக்கரவாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு பள்ளங்களில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களில் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.

3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சேரோடு சேராக உட்கார்ந்து இருக்காமல், அரைமணிக்கு ஒரு முறை ஒரு நிமிடம் எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடரவேண்டும்.

4. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். சேரில் உட்காரும்போது எதிரில் உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் உட்கார்ந்திருப்பது சரியான உயரம்.

5. சேரில் உட்காரும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படி உட்காருங்கள். உயரம் போதவில்லை என்றால் பாதம் படியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள்.
பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.

6. சேரில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.

7. நாம் உட்காரும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும் இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் சேரில் நன்றாக நிமிர்ந்து இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால் முதுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.

8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து குனிந்து பொருட்களை எடுக்கவோ தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கைகயில் வைத்துக் கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.

9. நடைப்பயிற்சி: உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளைப் பயன்படுத்தவே கூடாது.

முதுகுவலியை சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை.

இதனால் அதிகம் செலவு செய்யவேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.
லேசான வலிகளைக் கவனிக்காமல் விடும்போதுதான் அவை அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன. இப்போது முதுகெலும்பில் அறுவை சிகிச்சை செய்வது எளிது.

ஒரேநாளில் கூட எழுந்து நடக்க முடியும். இந்தநிலை நமக்கு ஏன்? முன்பே எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் நல்லதுதானே. மேலே சொன்ன வழிகள் முதுகுவலியை வரவிடாமல் செய்யும் எளியவழிகள்தான். முயன்று பாருங்கள்.

இயற்கை வைத்திய முறை
இயற்கை வைத்திய முறையில், சுடுநீரில் இடுப்புவரை அமிழ்ந்து உட்காருவது வலியைக் குறைக்கும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

சலபாசனம்
சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையை அதிகரிக்கும்.

ஆயுர்வேதத்தில் 100 க்கு 98 சதவீதம் நல்ல பலன் கிடைத்து வருகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவருவதில்லை.

சிறுநீர் அடைபட்டுப் போனாலோ, கால் தொங்கிப் போனாலோதான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ஓய்வெடுத்தல், பின்பு முறையான பயிற்சி செய்தல், அபான வாயுவைச் சீராக வைத்திருத்தல், அமரும் தன்மையைச் சற்று மாற்றிக்கொள்ளுதல், உணவுகளில் சிறிய மாற்றம் போன்றவை அவசியம்.

ஆயுர்வேதம் மூலம் இடுப்பு சவ்வு விலகுதல் நோயை 98 சதவீதம் குணப்படுத்தலாம்.

திடீரென முதுகுவலி அதிகரிக்கும் போது நாம் வீட்டில் மேற்கொள்ளக் கூடிய சில சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

ஒரு பாட்டிலில் சுடுநீரை ஊற்றி மூடி அதனை வலி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம்.
தீராத முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வலி குறையும்.

முதுகுவலிக்கு பூண்டு நல்ல நிவாரணமாக அமையும். காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டை சாப்பிட்டால் முதுகுவலி போன இடம் தெரியாது.
மேலும், பூண்டை ஏதேனும் ஒரு எண்ணெயில் வதக்கி அந்த எண்ணெயை முதுகில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*                             *அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே* *வாழ்க வளமுடன்*