Sunday 29 May 2016

பாண்டிய மன்னர்கள் வரிசை வரலாறு

கடற்ச்சீற்றத்தால் அழிந்த குமரிக் கண்டத்தில் எஞ்சிய நூல்களைக் கொண்டு பட்டியலிடப்பட்ட பாண்டிய மன்னர்களின் வரிசை..

முற்காலப் பாண்டியர்கள்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி
பெரும்பெயர் வழுதி

கடைச்சங்க காலப் பாண்டியர்கள்

முடத்திருமாறன்
மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்
பொற்கைப் பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன்
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
வெற்றிவேற் செழியன்
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்

இடைக்காலப் பாண்டியர்கள்

கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900

பிற்காலப் பாண்டியர்கள்

மூன்றாம்.இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1238-1250 இரண்டாம் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1276-1293

தென்காசிப் பாண்டியர்கள்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன்.கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)

உலகின் நீண்ட நெடிய வரலாறு, தமிழருக்கு மட்டுமே.. ஆயிரம் ராஜ்ஜியம் வந்தாலும், மன்னர்களில் சிறந்தோர் எங்கள் தமிழர்களே

Saturday 28 May 2016

NEET 2016 நுழைவுத்தேர்வு

NEET நுழைவுத்தேர்வு....

A to Z தகவல்கள்

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி, கடந்த மே 1 அன்று நடந்த மத்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களுக்கான AIPMT (All India Pre-Medical / Pre-Dental Entrance Test) தேர்வு, அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான (NEET- National Eligibility cum Entrance Test) முதற்கட்டத் தேர்வாக மாற்றியமைக்கப்பட்டது. இதைத் தமிழகத்தில் சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளார்கள். இரண்டாம் கட்டத் தேர்வு  ஜூலை 24ம் தேதி நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

“NEET தேர்வு என்பது, ஒருங்கிணைந்த தேசிய அளவிலான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வு. இந்தத்தேர்வை ‘Central Board of Secondary Education’ (CBSE) நடத்துகிறது.

இந்தியர்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். 17 வயதுக்கு குறையாமலும் 25 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவினருக்கு அதிகபட்ச வயதில் 5 ஆண்டு காலம் தளர்வு அனுமதிக்கப்படும். 10ம் வகுப்பு முடித்து, +2 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

+2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளைப் படித்து சராசரியாக 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  B.Sc (Physics/Chemistry/Biology (Botony or Zoology) Biotechnology) பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வை எழுதலாம். இதில் குறைந்தபட்சம் இரண்டு பாடங்களை உள்ளடக்கி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சராசரியாக 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. NEET 2016 தேர்வானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டத் தேர்வு மே 1ம் தேதி முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டத் தேர்வு விரைவில் நடக்கவிருக்கிறது. முதற்கட்டத் தேர்வில் பங்கேற்றவர்களும் இரண்டாம் கட்டத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். ஆனால், முதற்கட்ட தேர்வின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

இந்த எழுத்துத்தேர்வு 3 மணி நேரம் நடக்கும். வழக்கமாக, ஆங்கிலம் மற்றும் இந்தி யில் மட்டுமே தேர்வு நடக்கும். தற்போது மத்திய அரசு, நுழைவுத்தேர்வை தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாமி, பெங்காலி, உருது ஆகிய மொழிகளிலும் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதைப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

வினாக்கள், நான்கு விடைகளில் சரியானதைத் தேர்வு சரியான விடையைத் தேர்வு செய்யும் வகையில் (MCQ-Type) அமையும்.

கேள்விகள் கேட்கப்படும் பாடப்பகுதிகள்
   
இயற்பியல் - 45 கேள்விகள்
வேதியியல் - 45 கேள்விகள்
தாவரவியல் - 45 கேள்விகள்
விலங்கியல் - 45 கேள்விகள்

மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். சரியான விடைக்கு +4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு -1 மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்.

இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள்

* Physics syllabus of class 11th
* Physical world and measurement      
* Kinematics      
* Laws of Motion      
* Work, Energy and Power      
* Motion of System of Particles and Rigid Body      
* Gravitation      
* Properties of Bulk Matter      
* Thermodynamics      
* Behaviour of Perfect Gas and Kinetic Theory      
* Oscillations and Waves    
* Physics syllabus of Class 12th
* Electrostatics      
* Current Electricity      
* Magnetic Effects of Current and Magnetism      
* Electromagnetic Induction and Alternating Currents      
* Electromagnetic Waves      
* Optics      
* Dual Nature of Matter and Radiation      
* Atoms and Nuclei      
* Electronic Devices    
* Chemistry syllabus of class 11th
* Some Basic Concepts of Chemistry      
* Structure of Atom      
* Classification of Elements and Periodicity in Properties      
* Chemical Bonding and Molecular Structure      
* States of Matter. Gases and Liquids      
* Thermodynamics      
* Equilibrium      
* Redox Reactions      
* Hydrogen      
* s-Block Element (Alkali and Alkaline earth metals)      
* Some p-Block Elements      
* Organic Chemistry- Some Basic Principles and Techniques      
* Hydrocarbons      
* Environmental Chemistry    
* Chemistry syllabus of class 12th
* Topics
* Solid Stale      
* Solutions      
* Electrochemistry      
* Chemical Kinetics      
* Surface Chemistry      
* General Principles and Processes of Isolation of Elements      
* p- Block Elements      
* d and f  Block Elements      
* Coordination Compounds      
* Haloalkanes and Haloarenes      
* Alcohols. Phenols and Ethers      
* Aldehydes, Ketones and Carboxylic  Acids      
* Organic Compounds Containing Nitrogen      
* Biomolecules      
* Polymers      
* Chemistry in Everyday Life    
* Biology syllabus of class IIth
* Diversity in Living World      
* Structural Organisation in Animals and Plants      
* Cell Structure and Function      
* Plant Physiology      
* Human physiology    
* Biology syllabus or class 12th
* Reproduction      
* Genetics and Evolution      
* Biology and Human Welfare      
* Biotechnology and Its Applications      
* Ecology and environment    

இந்தத் தேர்வின் மூலம் தேசிய அளவில் சுமார் 50 ஆயிரம் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படும். இந்தத் தேர்வைக் கண்டு மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. +1, +2 பாடப்புத்தகங்களை முழுமையாகப் படித்தாலே போதும். 

விண்ணப்பிக்கும் முறை

www.mciindia.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் செய்தித்தாள் விளம்பரங்களில் வெளியிடப்படும். தேர்வுக்கட்டணம், பொதுப்பிரிவினருக்கு ரூ.1000. SC/ST, பிற வகுப்பினருக்கு ரூ.500. இக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும்.

விதிமுறைகள்

NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷூ, தளர்வான ஆடைகள், பெரிய பட்டன்கள் இல்லாத அரை கை சட்டையை அணியக் கூடாது. பேட்ஜ்கள் அணியக்கூடாது. மோதிரம், கொலுசு, தோடு, மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஹேர்பின், பெல்ட், தொப்பி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிபர்ஸ், ஹேண்ட் பேக் உள்ளிட்டவைகளையும் எடுத்துச் செல்லக்கூடாது.

பேனா, ஸ்கேல், கால்குலேட்டர், பிளாஸ்டிக் பவுச், தேர்வு அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் சார்ந்த ஆடைகளை உடுத்துபவர்கள் 1 மணி நேரத்திற்கு முன்பே தேர்வுக் கூடத்திற்கு வரவேண்டும்.

இந்த எழுத்துத்தேர்வு 3 மணி நேரம் நடக்கும். வழக்கமாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடக்கும். தற்போது மத்திய அரசு நுழைவுத்தேர்வை தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாமி, பெங்காலி, உருது ஆகிய மொழிகளிலும் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளது. இதைப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

இந்த 2016ம் வருடம் மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துவதும்  அல்லது நுழைவுத்தேர்வு மூலம் நடத்துவதும் மாநில அரசின் விருப்பம்.
அடுத்த வருடம்???

Thursday 26 May 2016

கல்விமுறை

"படித்ததில் பிடித்தது."

புலிகளையெல்லாம்
கூட்டமாய் பிடித்து
பொதி சுமக்க வைக்கிறது!
இந்த கல்வி முறை.
சிங்கங்களை சிறையில் அடைத்து
சிட்டுக் குருவி மாதிரி
கத்தப் பழக்குகிறது!
பாக்கட் பால் சமூகத்திடம்
பசுமாட்டைப் பற்றி
கட்டுரை எழுதச் சொல்கிறது
இந்த கல்வி முறை.
படிப்பை திணிக்கும் பதற்றத்தில்
பிஞ்சுகளின் பட்டாம் பூச்சிக் கனவுகளில்
பெட்ரோல் ஊற்றி விடுகிறது!
தன்னம்பிக்கையற்ற
தக்கைகளை உருவாக்கி
பன்னாட்டு நிறுவனங்களுக்கு
பார்சல் அனுப்புகிறது!
இந்த கல்வி முறை
எழுதப் படிக்கத் தெரிந்த
பாமரர்களுக்கு
பட்டை தீட்டி
வைரமென விற்கிறது.!
நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணைக் காட்டி
வருகிற பள்ளிகளின் விளம்பரம்
நூறு சதவிகித பிலேஸ்மான்ட்டைக் காட்டி
வருகிற கல்லுரி விளம்பரம்
எல்லாம்..
செக்கிழுக்க இங்கே எருதுகள் செய்து தரப்படும்
என்பதன் முகமூடிகள் தானே!
வகுப்பறை தாண்டி
வாசிக்காத சமூகம்!
பாட புத்தகம் தாண்டி
சிந்திக்காத சமூகம்!
வரலாறுகளை
வெறும் தேதிகளாய்..
பூகோளத்தை நாட்டின்
தலை நகரங்களாய் மட்டும்
மனப்பாடம் செய்த சமூகம்!
கேல்குலஸ் கணக்குகளை
எதற்குப் படித்தோம்
என்று-ஒரு
பொறியாளனே
புரிந்து கொள்ள முடியாத சமூகம்!
பத்து மார்க் கேள்விக்காக
பிக் பேங்கைப் படித்த சமூகம்!
கலித்தொகை தொடங்கி
கலிங்கத்து பரணி வரைக்கும்
ராபர்ட் ப்ராஸ்ட் தொடங்கி
வில்லியம் வேர்ட்ஸ்வர்த் வரைக்கும் படித்தாலும்
தப்பின்றிப் பேசத்
தடுமாறுகிற சமூகம்!
அடடா பட்டியலிட்டால்
அடங்காது இந்த கல்வி முறையின் சாதனைகள்.!
வெறும் வார்த்தகளால்
விளக்க முடியாத வேதனைகள்!

குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்

குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்

சந்தேகத்திற்குபதிலளிக்கும் தளம்

http://www.whyzz.com/

அன்றாட வாழ்க்கையில் நம் கண் முன்னே நடக்கும் சம்பவங்களை அறிவியல் பூர்வமாக விளக்கும் தளம்.உங்களுக்கு எழும் சந்தேகங்களை இத்தளத்தின் தேடல் கட்டத்தில் கேள்வியாக தட்டச்சு செய்து கொடுத்தால் அதற்கான விடைகள் தேடித்தரப்படுகிறது. இத்தளத்தைப் பயன்படுத்த நீங்கள் பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளும் தனிப்பிரிவாக காட்டப்படுகின்றன.

அறிவியல், இயற்கை, மனித உடல், உலகம் எனப் பல்வேறு முக்கிய தலைப்புகளில் கேள்வியும் பதிலும் இடம்பெற்றுள்ளன. சில பறவைகளின் முட்டை ஏன் பழுப்பு நிறமாக உள்ளது? சில பறவைகளின் முட்டை ஏன் வெள்ளை நிறமாக உள்ளது?

ஏன் நிழல் தோன்றுகிறது?

சூரியன் மறையும்போது வானம் நிறம் மாறுவதற்கு காரணம் என்ன?என்பது போன்ற கேள்விகளும் விடைகளும் இத்தளத்தில் ஏராளமாக தொகுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் இத்தளத்தில் உள்ள கேள்வி பதில்கள் பயனளிக்கக் கூடியவை.

சிறுவர்களுக்கானசமூக வலைத்தளம்

http://whyville.net/

சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டுக்கள் மூலம் பணத்தை நிர்வகிப்பது, சரியான முறையில் உண்பது மற்றும் ஆன்-லைன் பாதுகாப்பு போன்ற விசயங்களை கற்றுக் கொடுக்கிறது இத்தளம்.மற்றைய தளங்கள் போலவே சாட்டிங் சேவையும் பாதுகாப்பான முறையில் வழங்கப்படுவதாக இத்தளம் உறுதி ப்படுத்துகிறது. இச்சேவையை உபயோகிக்கும் முன் சிறார்கள் சாட்டிங் உரிமம் பெற வேண்டும். அதை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. ஆசிரியர்களும் இத்தளத்தில் இணைந்து கொண்டு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும்படியாக வசதி ஆகியவை இத்தளத்தின் சிறப்பாகும். 100 வகை விளையாட்டுக்கள் இத்தளத்தில் உள்ளன. இது தவிர சிறார்கள் தங்களுக்கென முகங்களை வடிவமைத்து உருவாக்கி கொள்ளும் அவதார் வசதி ஆகிய குழந்தைகளுக்கு பிடித்த அம்சங்கள் பல உள்ளன.

சிறுவர் தேடல் தளம்

http://www.kidrex.org/

இந்தத் தளம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது.கூகுள், யாகூ போன்ற தளங்களை நேரடியாக குழந்தைகள் அணுகித் தேடாமல் இத்தளத்தின் மூலம் தேடினால் தேவையற்ற இணையதளப் பக்கங்களுக்கு கவனம் திசை திரும்பாமல் தேவையான இணையதளப் பக்கங்கள் மட்டுமே பிரித்துக் காட்டப்படும். குழந்தைகளுக்குப் பிடித்தமான விஷயங்கள் குறித்த தளங்களைப் பட்டியலாக்கிக் காட்டுகிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கணினி மற்றும் இணைய பயன்பாட்டை எவ்வாறு அளிப்பது என்பதற்கான பல குறிப்புகள் இத்தளத்தில் தரப்பட்டுள்ளன.

மற்ற பிற தேடல் தளங்களைப் போலவே இத்தளமும் செயல்படுகிறது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பான தேடலை மட்டுமே தன் முதல் நோக்கமாக கொண்டு முடிவுகளைத் தருகிறது. இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. குழந்தைகள் வரைந்த ஓவியங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இணையதளம்

http://www.aplusclick.com/

கும் முறைக்கு ஏற்ப இத்தளம் அமைக்கப்பட்டிருந்தாலும், நம் நாட்டு சிறுவர்களுக்கும் இதில் தரப்படும் பாடங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இத்தளத்தை சிறுவர்களுக்கு பரிந்துரைக்கிறோம்.Arithmetic, Algebra, Geometry, Analysis, Logic, Applied, Exit Exam, Everyday, Olympiad, Funny, Sport Math, iPad eBooks எனும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.தர நிலை 1 முதல் 12 வரையாக மேற்கண்ட பாடப் பிரிவுகள் பட்டியலிடப்பட்டுள் ளன. இப்பாடங்கள் கணித அறிவை யும், சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்துவ தோடு ஆங்கில அறிவையும் வளர்க்கும்.

Sunday 22 May 2016

Short forms

VERY USEFUL SHORT FORMS
==========================
1.) GOOGLE : Global Organization Of
Oriented Group Language Of Earth .
2.) YAHOO : Yet Another Hierarchical
Officious Oracle .
3.) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4.) COMPUTER : Common Oriented
Machine Particularly United and used
under Technical and Educational
Research.
5.) VIRUS : Vital Information Resources
Under Siege .
6.) UMTS : Universal Mobile
Telecommunications System .
7.) AMOLED : Active-matrix organic light-
emitting diode
8.) OLED : Organic light-emitting diode
9.) IMEI: International Mobile Equipment
Identity .
10.) ESN: Electronic Serial Number .
11.) UPS: uninterruptible power supply .
12. HDMI: High-Definition Multimedia
Interface
13.) VPN: virtual private network
14.)APN: Access Point Name
15.) SIM: Subscriber Identity Module
16.) LED: Light emitting diode.
17.) DLNA: Digital Living Network Alliance
18.) RAM: Random access memory.
19.) ROM: Read only memory.
20.) VGA: Video Graphics Array
21.) QVGA: Quarter Video Graphics Array
22.) WVGA: Wide video graphics array.
23.) WXGA: Widescreen Extended
Graphics
Array
24.)USB: Universal serial Bus
25.) WLAN: Wireless Local Area Network
26.) PPI: Pixels Per Inch
27.) LCD: Liquid Crystal Display.
28.) HSDPA: High speed down-link
packet
access.
29.) HSUPA: High-Speed Uplink Packet
Access
30.) HSPA: High Speed Packet Access
31.) GPRS: General Packet Radio Service
32.) EDGE: Enhanced Data Rates for
Global
Evolution
33.)NFC: Near field communication
34.) OTG: on-the-go
35.) S-LCD: Super Liquid Crystal Display
36.) O.S: Operating system.
37.) SNS: Social network service
38.) H.S: HOTSPOT
39.) P.O.I: point of interest
40.)GPS: Global Positioning System
41.)DVD: Digital Video Disk
42.)DTP: Desk top publishing.
43.) DNSE: Digital natural sound engine .
44.) OVI: Ohio Video Intranet
45.)CDMA: Code Division Multiple Access
46.) WCDMA: Wide-band Code Division
Multiple
Access
47.)GSM: Global System for Mobile
Communications
48.)WI-FI: Wireless Fidelity
49.) DIVX: Digital internet video access.
50.) .APK: authenticated public key.
51.) J2ME: java 2 micro edition
52.) SIS: installation source.
53.) DELL: Digital electronic link library.
54.)ACER: Acquisition Collaboration
Experimentation Reflection
55.)RSS: Really simple syndication
56.) TFT: thin film transistor
57.) AMR: Adaptive Multi-Rate
58.) MPEG: moving pictures experts
group
59.)IVRS: Interactive Voice Response
System
60.) HP: Hewlett Packard
[4:24pm, 04/11/2014] +91 99 44 971917: This is a REAL Neurological screening Test.
Sit comfortably and feel calm.

You should be able to complete all 3 tests within 30 seconds or even less.

1.  Find the letter C from below.

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOCOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

2.  If you have already found the letter C, now find the digit 6 from below.

9999999999999999999999999999999999999999999999999999999999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999999999
9999699999999999999999999999999999999999999999999999999999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999999999
9999999999999999999999999999999999999999999999999999999999999999999

3.  Now find the letter N from below. It's a little more difficult.

MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMNMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMM

This is NOT a joke.

If you are able to pass this 3 tests, you can cancel your annual visit to your neurologist.
Your brain is great and you're far from having Alzheimer Disease.
Congratulations!
If you need to relook, that may be an early sign of an aging brain!

. And its not a joke. . . There is c, 6, and N in those crowdy lines

3 வருடத்திற்கு ஒருமுறை ஏன் கல்வித்தகுதியை புதுப்பிக்க வேண்டும்?

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த கல்வித்தகுதி 3 வருடத்திற்கு பின் புதுப்பிக்க வேண்டும் என்ற முறை இருப்பதன் காரணம் என்ன?
பதில் தெரிந்தால் தெரிவியுங்கள்.
@ படித்திருந்தும் பதிவை புதுப்பிக்காததால் வேலை கிடைக்காமல், உயர்கல்விதகுதியை புதுப்பிக்காததால் உயர்பதவிக்கு செல்ல முடியாமல் இருக்க காரணமான இந்த நடைமுறை தேவையா?
@ கல்வித்தகுதி இருந்தும் பதிவை புதுப்பிக்கவில்லை என்பது ஒரு காரணமா?
@ஒரு முறை பதிந்தால் போதும் அரசுப்பணி கிடைக்கும்வரை அதே முன்னுரிமை இருப்பதில் என்ன பிரச்சனை?
@அரசு வேலை கிடைத்தபின் அந்த பதிவை எடுத்துவிடலாமே?
@ ஓட்டுநர் உரிமம் கூட 20 வருடபயன்பாட்டில் இருக்கும்போது படிப்பிற்கு expiry date தேவையா?
@ மத்திய அரசு தேவையற்ற சட்டங்கள், நடைமுறைகளை நீக்கிவருவது போல மாநில அரசு இது போன்ற அலைச்சல் தரும் நடைமுறைகளை நீக்கினால் என்ன?

பட்டப்படிப்புக்கு மேல் படித்து பதியப்படும் ஒவ்வொரு உயர்பட்டங்களும் தனித்தனியே கவனமாக புதுப்பிக்க வேண்டியிருப்பது இன்னும் சிரமமாயிற்றே!
(D.T.ed., B.ed.,M.ed., M.phil., M.sc, ) போன்றவை தனித்தனியே புதுப்பிக்க சொல்வது பல்வேறு சிரமங்களைத் தருவதால் ஒருமுறை பதிந்தால் போதும் என்று சொல்லலாமே அரசு.

வேலைக்கான அழைப்புக்கடிதம் அனுப்பினால் விருப்பப்பட்டவர்கள் வருகிறார்கள். இறந்தவர்கள் வரப்போவதில்லை. கணினியில் பெயர் இருப்பதால் யாருக்கும் நட்டமில்லையே! அதுமட்டுமில்லாது இறந்து போகும் சிலருக்காக  உயிரோடு இருப்பவர்களை ஏன் அலையவிட வேண்டும்?

படிப்பதைவிட பதிவதும், புதுப்பிப்பதும் முக்கியமா?
வேலை தராவிட்டாலும் பரவாயில்லை அலையவிடுவதையாவது குறைக்கலாம். பதிவை புதுப்பிக்காமல் இன்னும் எத்தனை பேர் தங்களுக்கு கல்வித்தகுதி இருந்தும் வேலையை இழந்துகொண்டிருப்பார்களோ? Online ல் எளிதாக செய்யலாமே என யாரும் சொல்லவேண்டாம். ஏன் இந்த அர்த்தமற்ற நடைமுறை என்பதே கேள்வி? எனக்கு புரியவில்லை.

நண்பன் ஸ்ரீஜி

Saturday 21 May 2016

ராஜாராம் மோகன் ராய்

ராஜாராம் மோகன்ராயின் பிறந்த தினம்இன்று...
மே 22 ; உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்ட ராஜாராம் மோகன்ராயின் பிறந்த தினம்இன்று
நவீன இந்தியாவின் முதல் பெருந்தலைவர் என்று ராஜாராம் மோகன்ராயை சொல்வது பொருத்தமாக இருக்கும். 1772 இல் வங்கத்தில் பிறந்தார் இவர். இவரின் குடும்பம் வைணவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தது. முகலாய ஆட்சியாளர்களின் கீழே வரி வசூல் செய்யும் பணியில் அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவரின் பால்ய காலத்திலேயே உயர் ஜாதியில் இயல்பாக இருக்கும் வழக்கத்தால் அவருக்கு இருமுறை திருமணம் செய்துவைக்க பட்டது. முதலில் வங்காளி மற்றும் பாரசீகத்தை கற்று தேர்ந்த பின் பாட்னா போய் அராபிய மொழியை கற்றுக்கொண்டார். அங்கே அவரின் ஆசிரியர்கள் அவருக்கு அரிஸ்டாட்டில்,குரான் மற்றும் பைபிளை அறிமுகப்படுத்தினார்கள். பனாரஸில் அவர் சமஸ்க்ருதத்தை கற்றுத்தேர்ந்தார். இப்படி அவர் கற்ற மொழிகள் மட்டும் ஒரு டஜன் !
அவரின் அண்ணன் இறந்ததும் அவரின் கண் முன்னரே அவரின் எதிர்ப்பையும் மீறி அவரின் அண்ணி சதியால் தீக்கிரையாக்கப்பட்டார். கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக பல்வேறு ஊர்களில் அவர் பணியாற்றினார். அவரின் முதல் நூல் பாராசீகத்தில் அராபிய மொழியிலான முன்னுரையோடு வெளிவந்தது. அது உருவ வழிபாட்டை தாக்கியிருந்தது. கல்கத்தாவில் வாழ ஆரம்பித்ததும் ஆத்மிய சபையை துவங்கி இந்து மதத்தில் இருந்த மத மற்றும் சமூக தீமைகளுக்கு எதிராக போராட ஆரம்பித்தார்.
பிரம்ம சபையை நிறுவினார் ; பின்னர் அதுவே பிரம்ம சமாஜம் ஆனது. உருவ வழிபாட்டை எதிர்த்ததோடு இல்லாமல் ஜாதிய அமைப்பின் இறுக்கமான தன்மை,அர்த்தமற்ற மத சடங்குகள் ஆகியவற்றை விமர்சனம் செய்தார். ஒரே ஒரு இறைவனை தான் இந்து மதம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் வலியுறுத்துவதாக உறுதிபட சொன்ன அவர் இந்திய மதத்தின் பல கடவுள் வழிபாடு,கிறிஸ்துவத்தின் இறைவன்,அவரின் மகன் மற்றும் புனித ஆவி வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தின் தத்துவ வெளிச்சத்தை இந்துக்கள் அறிய வேண்டும் என்று அவர் இயங்கினாலும்,PERCEPTS OF JESUS நூலில் கிறிஸ்துவின் அற்புத செயல்களை சாத்தியமில்லை என்று நிராகரித்தார். இவ்வாறு இரு மதத்து மக்களின் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.
இந்து மதத்தை கிறிஸ்துவ மிஷனரிக்கள் தாக்குவதை தீவிரமாக எதிர்த்ததோடு மத மாற்றத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு பகுதிகளின் தத்துவ சங்கமம் நிகழ வேண்டும் என்று அவர் இயங்கியதோடு எல்லா மதத்தின் நம்பிக்கையாளர்களும் சகோதர்களாக சேர்ந்திருக்க முடியும் என்று நம்பினார். அவரை பழமைவாதிகள் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைத்தார்கள் ; அதற்கான கூட்டத்தில் இவரை பெற்ற அன்னையே கலந்து கொண்டார். அவரை ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்தார்கள்.
பதினோரு ஆண்டுகள் சதிக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை அவர் தொடுத்தார். வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்க மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை.
மேலும் ஆங்கிலேயே நாடாளுமன்றத்துக்கு சதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் கடிதம் எழுதிய பொழுது கொண்டு வரக்கூடாது என்று உறுதிபட இவரும் கடிதம் எழுதினார். பல்வேறு இறுதி சடங்கு நடைபெறும் இடங்களில் பெண்கள் தீக்கிரையாக்கப்படாமல் இருக்க உறவினர்களிடம் நெடிய சமரச பேச்சுவார்த்தையை நிகழ்த்துகிற பண்பாளராகவும் அவர் இருந்தார். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்றும்,பல தார திருமணம் கூடவே கூடாது என்றும் அவர் வாதாடினார்.
ஆண்களுக்கு என்று தனியாக ஒரு பள்ளியை துவங்கி அதில் ஆங்கிலம் கற்பிக்க ஆரம்பித்தார். கூடவே இயங்கியல் மற்றும் வால்டேரின் தத்துவங்களை அவர் அங்கே கற்பித்தார். பல்வேறு இதழ்களை நடத்திய இந்தியாவின் பத்திரிக்கை துறை முன்னோடி அவர். வங்க மொழியில் இலக்கணம் சார்ந்து பல்வேறு நூல்களையும் அவர் இயற்றினார். ஜமீன்தார்கள் நிலத்தில் பாடுபடும் தொழிலாளியை சுரண்டுவதை அவர் சாடினார். ஆங்கிலேய அரசு ஒரு நிலத்தில் இருந்து எவ்வளவு வரி பெறப்பட வேண்டும் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை சாடியதோடு இந்திய பொருட்கள் மீதான கடுமையான வரி விதிப்பை நீக்க வேண்டும் என்றும் அவர் முயற்சிகள் எடுத்தார்.
லத்தீன் அமெரிக்காவின் மக்கள் புரட்சி வென்றதும் அவர் ஊரில் உள்ள எல்லாருக்கும் விருந்து போட்டார். அயர்லாந்து மக்களை ஆங்கிலேய அரசு ஒடுக்கிய பொழுது சீர்திருத்த சட்டத்தை அவர்களுக்கு சாதகமாக ஆங்கிலேய அரசு நிறைவேற்றா விட்டால் ஆங்கிலேய ஆதிக்கமே இல்லாத பகுதியில் போய் வாழ்வேன் என்று முழக்கமிட்டார். நேப்பல்ஸ் புரட்சி தோல்வியுற்ற பொழுது மனம் வெம்மி முக்கியமான அலுவல்களை ரத்து செய்கிற பண்பும் அவருக்கு இருந்தது. கத்தோலிக்கர்கள் உரிமையோடு பிரட்டனில் வாழ வழி ஏற்பட்ட பொழுது அதை வரவேற்றார்
1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் போன அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த பொழுது மரணமடைந்தார். அங்கே எரிக்க வசதிகள் இல்லாததால் புதைக்கப்பட்டார். அவரின் கல்லறையின் மீது இந்த வாசகங்கள் ஒளிர்கின்றன :
இந்திய மக்களின் சமூக,அற மற்றும் பொருளாதார நிலையை முன்னேற்ற அவரின் ஓயாத உழைப்புகள்,உருவ வழிபாடு மற்றும் சதியை நீக்க அவரின் அக்கறை மிகுந்த முயற்சிகள் இறைவனின் மகிமை மற்றும் மனிதனின் நலத்தை மேம்படுத்துவற்றுக்காக வாதிட்ட ,ஓயாது அவரின் செயல்கள் அவரின் நாட்டு மக்களின் நினைவுகளில் நன்றியோடு நிறைந்திருக்கும்.

நன்றி: விகடன்