Wednesday 13 January 2016

ஊர்களின் பழைய பெயர்கள்

ஊர்களின் பழைய தமிழ் பெயர்கள்:

மருவிய பெயர்-தமிழ்பெயர்

குளித்தலை - குளிர் தண்டலை
கும்பகோணம்- குடந்தை, குடமூக்கு
தஞ்சாவூர்- தஞ்சை
பாண்டிச்சேரி- புதுவை
சேலம் - சேரலம்
கோயமுத்தூர்- கோவை (அ)
கோவன் புத்தூர்
கரூர்- கருவூர் வஞ்சி
ஊட்டி- உதகை
திண்டுக்கல்- திண்டீஸ்வரம்
நாமக்கல்- ஆரைக்கல்
புதுக்கோட்டை- புதுகை
ஏற்காடு - எரிக்காடு
விருத்தாசலம்- முதுகுன்றம்
வேதாரண்யம்- திருமறைக்காடு
திண்டிவனம்- புளியங்காடு
மைசூர் - எருமையூர்
வத்தலக்குண்டு- வெற்றிலைக்குன்று
ஸ்ரீரங்கம்- திருவரங்கம்
ஈரோடு - ஈரோடை
தருமபுரி - தகடூர்
தாராசுரம்- ராஜராஜேஸ்வரம்
சோளிங்கர்- சோழலிங்கபுரம்
திருத்தணி- செருத்தணி
திரிசூலம்-திருச்சுரம்
லால்குடி-தவத்துறை
பழவேற்காடு-புலிக்காடு
கயத்தாறு-கசத்தியாறு
எடப்பாடி- இடையர்பாடி
பழனி-திருஆவினன்குடி
பழமுதிர்சோலை- பழம் உதிர் சோலை
மதுரை-மாதுரையும் பேரூர்
செங்கல்பட்டு- செங்கழுநீர் பட்டு.
பூந்தமல்லி- பூவிருந்தன் வல்லி
ஆற்காடு- ஆருக் காடு
சிவகங்கை-நாலுக்கோட்டை
சிதம்பரம் - தில்லை
ஸ்ரீவில்லிபுத்தூர்- நாச்சியார் கோவில்
அருப்புகோட்டை- திருநல்லூர்
எக்மோர் - எழுமூர்
சிந்தாதிரி பேட்டை- சின்ன தறி பேட்டை
கோடம்பாக்கம்- கோடலம்பாக்கம்
திருவல்லிக்கேணி- திரு அல்லி கேணி
பழவந்தாங்கல்- பல்லவன் தாங்கல்
தாம்பரம்- தர்ம புரம்
நத்தம்- இகணைப்பாக்கம்
தேனாம்பேட்டை- தெய்வநாயகம் பேட்டை
வாரங்கல் - ஓரங்கல்
பொள்ளாட்சி- பொழில் ஆட்சி
திருவெறும்பூர் - திரு வெறும்பியூர்
காஞ்சிபுரம்- கஞ்சி வரம் (அ)
கஞ்சியூர்
தூத்துக்குடி-முத்துக்குளித்துரை நகரம்
சென்னை- மதராஸ் (அ)
சென்னப்பட்டணம்

கணிதமேதை இராமானுஜன்

🎁கணித மேதை இராமானுஜன் பிறந்த தினம் (இன்று தேசிய கணித தினம் 22/12/2015)🎁
*பிறப்பு; திசம்பர் 22, 1887
*பிறப்பிடம்*ஈரோடு,  *இறப்பு* ஏப்ரல் 26, 1920 (அகவை 32)
*இறப்பிடம்* சேத்துப்பட்டு (சென்னை), சென்னை, சென்னை மாகாணம்
*வாழிடம்* கும்பகோணம்
*தேசியம்* இந்தியர்
துறை* கணிதம்
*கல்வி கற்ற இடங்கள்* கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி
பச்சையப்பன் கல்லூரி
*அறியப்படுவது* Landau–Ramanujan constant
Mock theta functions
Ramanujan conjecture
Ramanujan prime
Ramanujan–Soldner constant
Ramanujan theta function
இராமானுசன் கூட்டு
Rogers–Ramanujan identities
Ramanujan's master theorem
*தாக்கம்* ஜி. எச். ஹார்டி
*சமயம்* இந்து சமயம்

தமிழ் விடுகதைகள்


1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?
- [கனவு]
2. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் - அது என்ன?
- [நத்தை]
3. மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் – அவள் யார்?
- [அடுப்பு]
4. பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் - அது என்ன?
- [குடை]
5. நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான் – அவன் யார்?
- [தவளை]
6. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?
- [பூட்டு]
7. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன் – அது என்ன?
- [மழை]
8. முற்றத்தில் நடக்கும் மூலையில் படுப்பான் – அவன் யார்?
- [துடைப்பம்]
9. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?
– [கதவு]
10. மேல் பலகை, கீழ் பலகை நடுவில் நெளி பாம்பு – அது என்ன?
- [நாக்கு]
11. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
- [வேர்க்கடலை]
12. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரமல்ல – அது என்ன?
- [மின்மினிப் பூச்சி]
13. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
- [பம்பரம்]
14. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
- [வாழைப்பழம்]
15. ஒட்டியிருக்கிறார்கள் எதிராளிகள், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கிறார்கள் – அது என்ன?
- [கத்தரிக்கோல்]
16. ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
- [நிழல்]
17. உணவை கையில் எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான் – அவன் யார்?
- [அகப்பை]
18. அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள் – அவள் யார்?
- [தென்றல்]
19. தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது – அது என்ன?
- [வானம்]
20. உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம் – அது என்ன?
- [தண்ணீர்]
21. கீறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?
- [நிலம்]
22. விரிந்த வயல் வெளியில் வதைத்த நெல் மணிகள் – அது என்ன?
- [நட்சத்திரம்]
23. மூலையில் முடங்கிக் கிடப்பான், மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்வான் –அவன் யார்?
- [துடைப்பம்]
24. இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல் – அது என்ன?
- [தேன்கூடு]
25. கையில்லாமல் நீந்தி, கடல் கடப்பான் – அவன் யார்?
- [கப்பல்]
26. எண்ணத்தை விதைத்து, வண்ணமாய் அறுவடை செய்வது – அது என்ன?
- [ஓவியம்]
27. அவனுக்கு காவலுக்கு ஒரு வீடு, வாழ்வதற்கு ஒரு வீடு – அவன் யார்?
- [ஆமை]
28. ஆரவாரம் இல்லாமல் அணிவகுப்பு, ஓயாது அவர்கள் உழைப்பு – யார் அவர்கள்?
- [எறும்புக் கூட்டம்]
29. கோழிபோல் உருவம், குதிரைபோல் ஓட்டம் – அது என்ன?
- [நெருப்புக் கோழி]
30. உயரப் பறக்கும், ஆனால் ஊரைச் சுற்றிக் கொண்டு பறக்காது – அது என்ன?
- [கொடி]
31. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?
- [கைத்தடி]
32. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?
- [தண்டோரா]
33. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
- [உளுத்தம் பருப்பு]
34. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான் – அவன் யார்?
- [காற்று]

35. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
- [பந்து]
36. நனைந்தாலும் நடுங்கமாட்டான் – அவன் யார்?
- [குடை]
37. அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான் – அவன் யார்?
- [புகை]
38. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் – அவன் யார்?
- [மோதிரம்]
39. எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான் – அவன் யார்?
- [நண்டு]
40. ஓடையில் நிற்கும் ஒற்றைக்காலனுக்கு ஒரே குறி உணவு – அவன் யார்?
- [கொக்கு]
41. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் - அது என்ன?
- [ஆலமரம்]
42. முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல் - அது என்ன?
- [நாக்கு]
43. நடந்தால் நடக்கும், நின்றால் நிற்கும் - அது என்ன?
- [நிழல்]
44. உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?
- [விமானம்]
45. விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் - அது என்ன?
- [காற்று]
46. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?
- [புகைப்படம்]
47. தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?
- [வாழைப்பூ]
48. தோகைபோல உடம்புக் காரி, துப்புரவு தொழிலுக்கு கெட்டிக்காரி - அவள் யார்?
- [துடைப்பம்]
49. ஆயிரம் அறைகள் அரண்மனையில், ராணியின் ஆட்சி - அது என்ன?
- [தேன்கூடு]
50. நூல் நூற்கும் ராட்டை அல்ல, வலை பின்னும் மீன் பிடிக்க அல்ல - அது என்ன?
- [சிலந்திப் பூச்சி]
51. நோயின்றி நாளும் மெலிவாள், கோள் சொல்லி நாளும் கழிவாள் - அவள் யார்?
- [நாட்காட்டியின் தாள்]
52. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம் தான் - அவள் யார்?
- [தவளை]
53. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை - அவன் யார்?
- [வெண்டைக்காய்]
54. சிவப்பு பைக்குள் சில்லறைகள் - அது என்ன?
- [மிளகாய்]
55. உலகமெங்கும் சுற்றும் அவனை ஒருவரும் கண்டதில்லை - அவன் யார்?
- [காற்று]
56. அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
- [கண்கள்]
57. வந்தால் கொடுக்கும், வராவிட்டால் கெடுக்கும் - அது என்ன?
-[மழை]
58. வயிறு முட்ட சாப்பிட்டால்தான் நிமிர்ந்து நிற்பான் - அவன் யார்?
- [பலூன்]
59. உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் - அது என்ன?
- [வியர்வை]
60. வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி - அது என்ன?
- [விளக்குத் திரி)
61. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது - அது என்ன?
- [புடலங்காய்]
62. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமக்கும் - அது என்ன?
- [புகைவண்டி]
63. கடல் நீரில் மறைந்திருக்கும் கல் - அது என்ன கல்?
- [உப்புக்கல்]
64. நிறைவேறாத ஆசைகளை நித்திரையில் பெறலாம் - அது என்ன?
- [கனவு]
65. கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் - அது என்ன?
- [மணியோசை]
66. பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?
- [தேங்காய்]
67. தேவை என்றால் வீசுவார்கள், தேலையில்லை என்றால் எடுத்து வைப்பார்கள் - அது என்ன?
- [நங்கூரம்]
68. ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?
- [கத்தரிக்கோல்]
69. எட்டித் தொட நினைத்தேன், இடறி விழுந்தேன், குதித்து தொட நினைத்தேன் குட்டிக் கரணம் போட்டேன் - அது என்ன?
- [வானம்]
70. பழகினால் மறக்காதவன், பயம் அறியாதவன் - அவன் யார்?
- [நாய்]
71. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான் - அவன் யார்?
- [சூரியன்]
72. நித்திரையின் தூதுவன், நினையாமல் வருவான் - அவன் யார்?
- [கொட்டாவி]
73. உடல் இல்லாதவன் ஊரெல்லாம் பவனி வருவான் - அவன் யார்?
- [காற்று]
74. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன?
- [முட்டை]
75. பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு - அது என்ன?
- [நிலா]
76. தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது - அது என்ன?
- [கோலம்]
77. அனைவரையும் ஆட்டிப் படைக்கும், ஆதவன் வந்தால் ஓடிப்போகும் - அது என்ன?
- [குளிர்]
78. வாணலியில் விரியும் வட்ட வட்ட இலை - அது என்ன?
- [அப்பளம்]
79. உச்சியின் ஊடே சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பல்லை இழப்பான் - அவன் யார்?
- [சீப்பு]
80. கொடுக்கு இரண்டு இருந்தாலும், அவனுக்கு வாலில்தான் விஷம் - அவன் யார்?
- [தேள்]
81. உறையில் உறங்குவான், உயிரைப் பறிப்பான் - அது என்ன?
- [வாள்]
82. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது - அவர்கள் யார்?
- [எறும்புக்கூட்டம்]
83. எரித்தால் சிவப்பு அணைந்தால் கறுப்பு - அது என்ன?
- [கரித்துண்டு]
84. கரித்துண்டு நான், கடினத்திற்கு நான், காண்போரைக் கவருவேன் - நான் யார்?
- [வைரம்]
85. இரண்டு பெண்கள், இரட்டைப் பிறவிகள் ஒருத்தி கீழே வந்தால் ஒருத்தி மேலே போவாள் - அவர்கள் யார்?
- [தராசுத் தட்டுகள்]
86. அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் - அது என்ன?
- [கரும்பு]
87. பாறைமேல் இட்டவிதை பார்ப்பவர் வியக்க முளைத்த விதை - அந்த விதை?
- [பல்]
88. மண்ணிலே பிறந்து விண்ணிலே மறையுது - அது என்ன?
- [நிலா]
89. நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அது என்ன?
- [மீன்]
90. நிலத்திலே முறைக்காத செடி நிமிர்ந்மு நிற்காத செடி - அது என்ன?
- [தலைமுடி]
91. தொப்பை பயனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல் - அது என்ன?
- [சட்டை]
92. தச்சர் கொத்தனார் செய்யாத தேர் தானே கிளம்பும் சித்திர தேர் - அது என்ன?
- [புற்று]
93. சிவப்பு மொசைக் கொட்டை பகட்டும் பட்டு சட்டை அந்த சட்டை - அது என்ன?
- [பட்டுப்பூச்சி]
94. உணவை எடுப்பான், எல்லோருக்கும் கொடுப்பான், ஆனால் தான் மட்டும் உண்ணமாட்டான் - அவன் யார்?
- [அகப்பை]
95. உதைக்க தெரிந்தவனுக்கு நன்கு உழைக்கவும் தெரியும் - அவன் யார்?
- [கழுதை]
96. உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?
- [நெல்லிக்காய்]
97. உணவு கொடுத்தால் வளருவான், நீர் கொடுத்தால் மாண்டு போவான் - அவன் யார்?
- [நெருப்பு]
98. உறங்காமல் தவிப்பவன், ஊருக்குள் வந்தால் பலரை பலி வாங்குவான் - அவன் யார்?
- [சுனாமி]
99. உயிரில்லாதவன் தினமும் ஓயாமல் ஓடுகிறான் - அவன் யார்?
- [கடிகாரம்]
100. கடலில் பிறந்தவன், அவன் இல்லாத வீடே இல்லை - அவன் யார்?
- [உப்பு]
101. மண்மீது குடையாவான், மழைக்கு துணையாவான் - அவன் யார்?
- [மரம்]
102. ஊருக்கெல்லாம் ஒரே ஆடை - அது என்ன?
- [வானம்]
103. கையுண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை - அவன் யார்?
- [சட்டைத்துணி]
104. அள்ள முடியும், கிள்ள முடியாது - அது எது?
- [தண்ணீர்]
105. ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?
- [வேர்க்கடலை]
106. மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?
- [அடுப்பு விளிம்புகள்]
107. ஊரையே சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?
- [செருப்பு]
108. பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?
- [பிறக்கும் குழந்தை]
109. தேவைப்படும்போது பையை நிரப்பலாம், ஆனால் தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
110. இரவிலே எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?
- [நிலவு]
111. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?
- [ஆமை]
112. ஒருநாள் முழுமுகம் காட்டுவான், ஒருநாள் முகமே காட்ட மாட்டான் -அவன் யார்?
- [நிலவு]
113. வீடு கட்டத் தேவை சாரம். வீட்டு ஒளிக்குத் தேவை இன்னொரு சாரம் - அது என்ன சாரம்?
- [மின்சாரம்]
114. உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன?
- [தென்னை மரம்]
115. நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ?
- [அல்லிப்பூ]
116. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?
- [கப்பல்]
117. ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [இமைகள்]
118. ஆயிரம்பேர் திரண்டாலும், அணு அளவு கூட தூசி கிளம்பாது - அது என்ன?
- [எறும்புக்கூட்டம்]
119. குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான் - அது என்ன?
- [பனிக்கட்டி]
120. கிட்ட இருக்கும் பட்டணம் எட்டி பார்க்க முடியாது - அது என்ன?
- [நமது முதுகு]
121. பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?
- [மாதுளம் பழம்]
122. காற்றிலே பறந்து போகும் கண்ணாடிக் கூண்டு, கைபட்டால் உடைந்து போகும் கண்ணாடிக் கூண்டு - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
123. பள்ளிக்குப் போனாலும் பாடம் படிக்க மாட்டான், ஆனால் சரியாக கண்ணக்குச் சொல்வான் - அவன் யார்?
- [கால்குலேட்டர்]
124. குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன?
-[கத்தரிக்காய்]
125. மழை நேரத்தில் வெட்ட வெளியில் மின்னும் விளக்கு - அது என்ன?
- [மின்னல்]
126. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான் - அவன் யார்?
-[ரப்பர்]
127. ஒலி கொடுத்து அழைப்பான், உரையாடலில் திளைப்பான் - அவன் யார்?
-[டெலிபோன்]
128. ஆட்டிவிட்டால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்குவான் - அவன் யார்?
- [ஊஞ்சல்]
129. மண்ணெடித்து கூடு கட்டும், மரம் அரித்து உயிர் வாழும் - அது என்ன?
- [கரையான்]
130. சிதறிக் கிடக்குது புள்ளிகள் சித்திரம் வரைய ஆளில்லை - யார் அது?
-[நட்சத்திரக்கூட்டம்]
131. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
- [எலிப்பொறி]
132. குதி குதித்தான் பல் இளித்தான் - அவன் யார்?
- [சோளப்பொறி

தமிழ் விடுகதைகள்...
....................................

1. மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ?

2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ?

3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன ?

4. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

5. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?

6. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?

7. எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார்?

8. நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

9. வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?

10. அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?

11. வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?

12. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?

13. சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்?

14. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?

15.வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?

விடைகள்
1.    மஞ்சள்
2.    மாதுளம்பழம்
3.    இதயம்
4.    உப்பு
5.    அடுப்புக்கரி
6.    தென்னைமரம்
7.    நிலா
8.    பென்சில்
9.    அகப்பை
10. அப்பளம்
11. தீக்குச்சி
12. கண்ணீர்
13. அருவி
14. தொலைபேசி

15. செருப்புபுன்முறுவல்
  

1. அரைச்சாண் ராணி;​ அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?

2. ஆனை விரும்பும்,​ சேனை விரும்பும்;​ அடித்தால் வலிக்கும்,​ கடித்தால் இனிக்கும். அது என்ன?

3. இரவெல்லாம் பூங்காடு;​ பகலெல்லாம் வெறுங்காடு. அது என்ன?

4. உருவத்தில் பெரியவன்;​ ஊருக்கு உயர்ந்தவன்?.

5. உருவத்தில் சிறியவன்;​ உழைப்பில் பெரியவன். அவன் யார்?

6. ஊரெல்லாம் வம்பளப்பான்;​ ஓர் அறையில் அடங்குவான். அவன் யார்?

7. எட்டி நின்று பார்ப்பான்;​ பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்?

8. ஏறினால் வழுக்கும். இனிய கனி தரும். காயைத் தின்றால் துவர்க்கும். அது என்ன?

9. ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை?

10. ஓயாது இரையும் இயந்திரம் அல்ல;​ உருண்டோடி வரும் பந்தும் அல்ல. அது என்ன?

11. கடிக்கத் தெரியாதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?

12. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு பிடி தண்ணீர். அது?

13. தரையில் தாவுவான்;​ தண்ணீரில் மிதப்பான். அவன் யார்?

14. ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன பாய்?

15. ஊரெல்லாம் சுற்றும் தலை. அது என்ன?

விடைகள்:

1.வெண்டைக்காய்2.கரும்பு 3.வானம் 4.கோபுரம் 5.எறும்பு 6.நாக்கு 7.கேமரா 8.வாழை 9.உள்ளங்கை 10.கடல் அலை11.சீப்பு 12.இளநீர் 13.தவளை14.ரூபாய்

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்
-----------------------------------------

வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோஅல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.கட்டணம்,பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை:

அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரைபணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த:

உதவி இயக்குநர் (வெளியீடுகள்),எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,சென்னை-600 002என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:

பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

எப்படி பெறுவது?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:

சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம்இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.