Monday 24 April 2017

Powerbank

பட்ஜெட் விலையில் பவர் பேங்க்... எது வாங்கலாம்?! #GadgetTips
கருப்பு

மொபைல் பயன்படுத்துபவர்கள் பவர் பேங்க் வைத்திருக்க வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு நிச்சயமாக 'ஆம்' என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், 4ஜி நெட்வொர்க் சேவை, பலதரப்பட்ட அப்ளிகேஷன்கள் பேட்டரியின் சார்ஜை எளிதில் தீர்க்கின்றன. எனவே, அலுவலகத்தில் பணிபுரிபவர்களும், அதிகம் பயணம் செய்பவர்களும் பவர் பேங்க் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. பட்ஜெட் விலையில் தற்போது நிறைய பவர் பேங்குகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய தொகுப்பு தான் இது.

Intex IT-PB11K :

எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உற்பத்தி செய்யும் இன்டெக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றான இந்த பவர் பேங்க், வாடிக்கையாளர்கள் நம்பகமான தேர்வாக இருக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று எலக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு யூ.எஸ்.பி கேபிள் வழியாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். சார்ஜ் இன்டிகேட்டர் இருப்பதால் பவர் பேங்கின் சார்ஜ் அளவைத் தெரிந்துகொள்ள முடியும். ஃப்ளாஷ் லைட் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. பட்ஜெட்க்கு ஏற்ற தரமான தயாரிப்பு என வாடிக்கையாளர்கள் பலரும் இதற்கு சான்றளிக்கிறார்கள்.

விலை : ரூ.899/-
பேட்டரி திறன் : 11000 mAh
எடை : 280 கிராம்

Mi Power Bank (10000 mAh) :

கையடக்க அளவில் பவர் பேங்க் வேண்டும் என நினைப்பவர்களுக்கு எம்.ஐ பவர் பேங்க் நல்ல சாய்ஸாக இருக்கும். ஓவர் சார்ஜிங் ஆகாத அளவுக்கு இதில் தொழில்நுட்ப வசதி இருப்பதால், பேட்டரி நீடித்து உழைக்கிறது. விரைவில் சூடாவதும் இதில் தடுக்கப்படுகிறது. ஆனால் ஒரேயொரு யூ.எஸ்.பி அவுட்புட் மட்டுமே இருப்பதால், ஒரு நேரத்தில் ஒரு எலக்ட்ரானிக் பொருளை மட்டுமே இதன் மூலம் சார்ஜ் செய்யமுடியும். இதிலும் சார்ஜ் இன்டிகேட்டர் இருக்கிறது. இந்த மாடல் போன்றே அதிகம் போலியான பொருள்கள் சந்தையில் கிடைப்பதால் வாங்கும்போது கவனம் தேவை.

விலை : ரூ.1,299/-
பேட்டரி திறன் : 10000 mAh
எடை : 207 கிராம்

Ambrane P-1310 :

Ambrane P-1310 மாடலின் சிறப்பே இதன் ஸ்டைலிஷான வடிவமைப்பு தான். பெர்ஃபார்மன்ஸ் விஷயத்தில் இந்த மாடல் ஒரு கோலி! இரண்டு யூ.எஸ்.பி அவுட்புட் பாய்ன்ட்கள், 13000 mAh பேட்டரி திறன், LED ஃப்ளாஷ் லைட் என இதன் சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதன் பேட்டரி திறன் அதிகம் என்பதால் அதிகமுறை ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யமுடியும். விரைவில் சூடாகாது என்பதும், அதிக பேட்டரி திறன் கொண்டிருப்பதும் இதன் சிறப்பம்சங்கள். ஒரு வருட வாரன்ட்டியுடன் இந்த மாடல் சந்தையில் கிடைக்கிறது.

விலை : ரூ.999/-
பேட்டரி திறன் : 13000 mAh
எடை : 250 கிராம்

Flipkart SmartBuy Power Bank :

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், SmartBuy என்ற பெயரில் பல புதிய பொருள்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஸ்மார்ட்போன் அளவில் இந்த பவர் பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பின் அங்கிகாரம் பெற்றிருப்பதால் இதன் தரத்தைப் பற்றிய சந்தேகம் தேவை இல்லை. விரைவில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் திறன் இதன் கூடுதல் சிறப்பம்சம். இரண்டு யூ.எஸ்.பி அவுட்புட் சார்ஜிங் பாய்ன்ட்கள் இதில் இருக்கின்றன. எடை கொஞ்சம் அதிகம் என்பது இதன் மைனஸ்.

விலை : ரூ.849/-
பேட்டரி திறன் : 11000 mAh
எடை : 270 கிராம்


Huawei Honor 13000 mAh :

ஹானர் ப்ராண்ட் மொபைல் விரும்பிகளுக்கு ஏற்றது இந்த பவர் பேங்க். இதே பேட்டரி திறன் கொண்ட பவர் பேங்குகள் இதைவிடக் குறைவான விலைக்குக் கிடைத்தாலும், தரம் முக்கியம் என நினைப்பவர்களின் சாய்ஸாக இது இருக்கிறது. இன்புட் மற்றும் அவுட்புட் இரண்டும் 5V மின்சக்தி கொண்டது. இரண்டு யூ.எஸ்.பி போர்ட்களின் வழியாக ஒரே நேரத்தில் இரண்டு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். விரைவாக சார்ஜ் ஏறுவது இதன் ப்ளஸ் பாய்ன்ட். ஆனால், 325 கிராம் எடை கொண்டது என்பது இதன் சிறிய குறை.

விலை : ரூ.1,299/-
பேட்டரி திறன் : 13000 mAh
எடை : 325 கிராம்

பவர் பேங்குகளைப் பொறுத்தவரை பொதுவாக அதன் மொத்தத் திறனின் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே அவுட்புட் திறனாக இருக்கின்றன. பவர் பேங்க் முழுவதும் சார்ஜ் ஏற கொஞ்சம் நேரம் அதிகம் ஆகும் என்பதால் வெளியூருக்குச் செல்வதற்கு முந்தைய நாளே சார்ஜ் ஏற்றிக்கொள்ள திட்டமிடுதல் அவசியம். 4ஜி மொபைல் பயன்படுத்தும்போது மொபைல் சார்ஜ் சீக்கிரம் தீரும் என்கிறார்கள். எனவே தேவையற்ற நேரங்களில் டேட்டா பயன்படுத்துவதைக் குறைக்கலாம்.

Saturday 22 April 2017

RTGS, NEFT, IMPS, UPI

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).

குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.

தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____

NEFT : National Electronic Fund Transfer

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.

NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
_______

மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

IMPS : Immediate Payment Service

24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.

UPI : Unified Payments Interface

இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை.

அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

Friday 7 April 2017

ஏப்ரல் முக்கிய தினங்கள்

Apr 01     முட்டாள்கள் தினம் 
Apr 02     மூளைச்சிதைவு (ஆட்டிசம்) நோய் விழிப்புணர்வு தினம்
Apr 05     National Meritime Day
Apr 07     உலக ஆரோக்கிய தினம் 
April 12     உலக விண்வெளி மற்றும் வான்வெளி தினம் 
Apr 13     ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் 
Apr 14     அம்பேத்கர் பிறந்த நாள் 
April 17     உலக ஹீமோபிலியா தினம் 
Apr 18     உலக பண்பாட்டு தினம் |World Heritage Day
Apr 21     குடிமைப் பணிகள் தினம் 
April 21     World Creativity and Innovation Day
Apr 22     உலக புவி தினம் 
Apr 23     உலக புத்தக தினம் , உலக காப்புரிமைத் தினம் 
April 24     உலக ஆராய்ச்சிகூட விலங்குகள் தினம் 
Apr 25     உலக மலேரியா தினம்
Apr 26     World Intellectual Property Day (UN)
April 28     உலக தொழிலாளர்கள் நினைவு தினம் 
April 29     உலக நடன தினம்

ஏப்ரல் மாதத்தின் சிறப்புகள்

தெரிந்துகொள்ளுங்கள்....(ஏப்ரல் மாதம்)

ஏப்ரல் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்
1, 1578 வில்லியம் ஹார்வி - ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானி.
1, 1937 ஹமீத் அன்சாரி - இந்தியக் குடியரசுத் துணைத்
தலைவர். இரண்டாம் முறையாகத் தேர்வு பெற்றவர்.
2, 1881 வா.வே. சுப்ரமணிய அய்யர் - தமிழறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர்.
3, 1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா - இந்தியாவின் முதல் ராணுவ தளபதி.
4, 1017 ஸ்ரீராமானுஜர் - இந்து மதத் துறவி.
5, 1827 ஜோசப் லிஸ்டர் - ஆன்டிசெப்டிக் மருத்துவ
முறையைக் கண்டறிந்தவர்.
6, 1815 மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை -
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இயற்றிய தமிழ் பேரறிஞர்.
7, 1770 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் - ஆங்கிலக் கவிஞர்.
7, 1920 ரவிசங்கர் - சித்தார் இசைக் கலைஞர்.
10, 1847 ஜோசப் புலிட்சர் - இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளில் சிறந்தோர்க்கு "புலிட்சர் விருது' வழங்கப்படுகிறது.
10, 1894 ஜி.டி. பிர்லா - பிர்லா குழுமத் தலைவர்.
11, 1869 கஸ்தூரிபா காந்தி - மகாத்மா காந்தியின்
துணைவியார்.
13, 1930 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - திரைப்படப் பாடலாசிரியர்.
14, 1891 டாக்டர். அம்பேத்கார் - இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த சட்ட வல்லுநர்.
16, 1867 வில்பர் ரைட் - விமானத்தைக் கண்டுபிடித்த
ரைட் சகோதரர்களில் ஒருவர்.
16, 1889 சார்லி சாப்ளின் - உலகப் புகழ் நகைச்சுவை நடிகர்.
17, 1961 கீத் சேத்தி - இந்தியர், உலக பில்லியர்ட்ஸ் சேம்பியன்.
17, 1972 முத்தையா முரளீதரன் - இலங்கை கிரிக்கெட் வீரர்.
19, 1957 முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ் குழுமத் தலைவர்.
19, 1977 அஞ்சு பாபி ஜார்ஜ் - இந்தியத் தடகள வீராங்கனை.
20, 1950 சந்திரபாபு நாயுடு - முன்னாள் ஆந்திர முதல்வர், தெலுங்கு தேசத் தலைவர்.
21, 1926 ராணி எலிசபெத் ஐஐ - இங்கிலாந்து அரசி.
22, 1870 விளாதிமிர் லெனின் - சோவியத் ரஷ்யாவின்
முன்னாள் (மறைந்த) தலைவர்.
23, 1564 வில்லியம் ஷேக்ஸ்பியர் - புகழ்பெற்ற ஆங்கில
நாடகாசிரியர்.
24, 1973 சச்சின் டெண்டுல்கர் - பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர்.
25, 1874 மார்க்கோனி - ரேடியோவைக் கண்டறிந்த
விஞ்ஞானி.
25, 1912 பேராசிரியர் மு. வரதராசனார் - முன்னாள் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.
27, 1949 பி. சதாசிவம் - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி.
28, 1937 சதாம் ஹுசைன் - ஈராக் முன்னாள் அதிபர்.
29, 1848 ராஜா ரவிவர்மா - புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்.
29, 1891 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
30, 1987 ரோஹித் சர்மா - கிரிக்கெட் வீரர்.

நினைவு தினங்கள்
1, 2012 என்.கே.பி. சால்வே - முன்னாள் மத்திய அமைச்சர்.
4, 1968 மார்டின் லூதர் கிங் - அமெரிக்கர். நீக்ரோ மக்கள்
உரிமைக்காகப் பாடுபட்டவர்.
5, 2007 லீலா மஜூம்தார் - வங்காள எழுத்தாளர்.
5, 1957 டாக்டர் அழகப்ப செட்டியார் - கல்வியாளர், வள்ளல்.
8, 1857 மங்கள் பாண்டே - சுதந்திரப் போராட்ட வீரர்.
8, 1894 பங்கிம் சந்திர சட்டோபாத்தியாய - வங்காள
எழுத்தாளர்.
8, 1973 பிக்காசோ - ஓவியர்.
8, 2013 மார்கரெட் தாட்சர். பிரிட்டனின் முதல் பெண் பிரதமர்.
10, 1995 மொரார்ஜி தேசாய் - முன்னாள் பாரதப் பிரதமர்.
12, 1817 சார்லஸ் மெஸ்ஸியர் - வால் நட்சத்திர ஆராய்ச்சி
விஞ்ஞானி.
12, 1945 ரூஸ்வெல்ட் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி.
18, 1955 ஐன்ஸ்டீன் - பிரபஞ்ச ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி.
14, 1962 எம். விஸ்வேஸ்வரய்யா - கிருஷ்ணராஜசாகர் அணை கட்டிய பொறியாளர்.
14, 1950 ரமணர் மகரிஷி.
14, 2013 ராமபிரசாத் கோயாங்கா - தொழில் அதிபர்.
15, 1990 எஸ். பாலசந்தர் - வீணை வித்வான், தமிழ்ப்பட
இயக்குநர்.
19, 1882 சார்லஸ் டார்வின் - விஞ்ஞானி.
19, 2013 சிவந்தி ஆதித்தன் - தினந்தந்தி நாளிதழ் அதிபர்.
21, 1978 டி.ஆர். மகாலிங்கம் - தமிழ்த் திரைப்பட நடிகர்,
பாடகர்.
21, 2013 சகுந்தலா தேவி - கணித மேதை.
21, 1964 பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்.
22, 2013 லால்குடி ஜெயராமன் - வயலின் மேதை.
23, 1994 ரிச்சர்ட் நிக்ஸன் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி.
23, 1992 சத்யஜித்ரே - வங்காளத் திரைப்படத் தயாரிப்பாளர்.
24, 2011 சத்யசாயி பாபா - இந்து மத போதகர்.
26, 1920 ஸ்ரீனிவாச ராமானுஜன் - கணித மேதை.
28, 1942 உ.வே. சாமிநாத அய்யர் (உ.வே.சா.) ஓலைச்
சுவடிகளிலிருந்த நூல்களைச் சேகரித்து அச்சிட
உதவிய மேதை.
29, 1980 ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் - ஆங்கிலப்பட இயக்குநர்.
28, 1945 முசோலினி - இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி.

ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள்
ஏப்ரல் 1
1935 - இந்தியாவில் ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது.
1912 - இந்தியத் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. முன்னர் கொல்கத்தா
தலைநகராக இருந்தது.
1936 - பீகாரிலிருந்து ஒடிசா பிரிக்கப்பட்டது.
1985 - பயிர் பாதுகாப்பு (இன்சூரன்சு) அமலாக்கப்பட்டது.
2012 - வங்கிக் காசோலைகள், கேட்பு வரைவோலைகள் 6 மாத காலத்திலிருந்து 3 மாத காலமே செல்லுபடி
யாகும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு செய்தது.
2, 1970 அசாம் மாநிலத்திலிருந்து பிரிந்து மேகலாயா
உருவானது.
4, 1973 ரஷ்யா - சல்யூட் - 2 விண்கலத்தை விண்ணில்
செலுத்தியது.
4, 1991 சென்னை - லண்டன் நேரடி விமான சர்வீஸ்
துவங்கியது.
5, 1930 தண்டி யாத்திரையில் காந்தியடிகள் கையில் அள்ளிய உப்பை ஏலம் போட்டார். ரூ. 1600-க்குப் போனது.

5, 1980 பாரதீய ஜனதா கட்சி உதயமானது.
6, 1805 இந்திய கோஹினூர் வைரம் இங்கிலாந்து சென்றது.
6, 1896 முதல் ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது. 13 நாடுகள் பங்கேற்றன. முதலாம் ஜார்ஜ் அரசர்
விழாவைத் தொடங்கி வைத்தார்.
6, 1942 இந்தியப் பகுதி மீது ஜப்பான் விமானம் குண்டு
வீசியது.
7, 2005 இந்தியா - பாகிஸ்தான் - "ஸ்ரீநகர் டூ முஸôபர்பாத்' பேருந்து போக்குவரத்து ஆரம்பம்.
10, 1790 கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு அமெரிக்கா
காப்புரிமையை அறிமுகம் செய்தது.
11, 1953 சென்னை நகரில் "ட்ராம் சர்வீஸ்' நிறுத்தப்பட்டது.
11, 1961 முதன்முதலாக விண்வெளியில் வாஸ்டாக் விண்கலத்தில் ரஷ்யாவின் யூரி ககாரின் பயணம் செய்தார்.
12, 2007 இந்தியாவில் அக்னி-3 - 3000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை
செய்யப்பட்டது.
13, 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக் படுகொலை டயர் என்பவரால் நடத்தப்பட்டது.
13, 1948 ஒடிசாவின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்
பட்டது. முன்னர் "கட்டாக்' தலைநகராக இருந்தது.
14, 1912 டைட்டானிக் கப்பல் 1052 பயணிகளுடன்
இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவில்
பனிப்பாறையில் மோதி உடைந்தது.
15, 1980 ஆறு வங்கிகள் தேச உடைமையாக்கப்பட்டன.
முன்னர் 14 + 6ம் ஆக 20 வங்கிகளும், ஸ்டேட்பேங்க் -
7-ம் ஆக 27 வங்கிகள் தேச உடைமையாக உள்ளன.
17, 1915 தமிழகத்துக்கு முதன்முதலாக காந்திஜியும்
கஸ்தூரிபாவும் வந்தனர்.
17, 1952 இந்தியாவில் முதல் மக்களவை அமையப் பெற்றது.
19, 1971 ரஷ்யா சல்யூட்-1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
19, 1975 இந்தியாவில் இஸ்ரோ - ஆர்யபட்டா செயற்கைக் கோளுடன் தனது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது.
19, 2012 இந்தியா - அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் வெற்றி.
20, 1770 கேப்டன் ஜேம்ஸ் குக் - ஆஸ்திரேலியா பகுதியில்
நியூ சௌத்வேல்ஸ் பகுதியைக் கண்டுபிடித்தார்.
20, 1902 மேடம் கியூரி தம்பதியினர் ரேடியத்தைக்
கண்டுபிடித்தனர்.
20, 1960 ஏர் இண்டியா ஜெட் விமானம் முதன்முதலாக
லண்டன் சென்றது.
21, 1837 ஜெர்மனியில் ஃபிரைடிரிச் புரோபெல் என்பவரால் முதன்முதலாக பாலர் பள்ளி (கின்டர் கார்டன்) தொடங்கப்பட்டது.
21, 1995 இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை, தரையிலிருந்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் சோதனையில்
வெற்றியடைந்தது.
26, 1962 அமெரிக்காவின் - ரேஞ்சர் 4 நிலவில் இறங்கியது.
27, 1918 இந்தியாவில் முதன்முதலாக சென்னையில், திரு.வி.க.வும், வாடியாவும் "தொழிலாளர் சங்கம்' அமைப்பை நிறுவினர்.
தொகுப்பு: வி.ராமலிங்கன், சென்னிமலை.

முக்கிய தினங்கள்
1 முட்டாள்கள் தினம்.
2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்.
2 அறிவுத்திறன்
(ஆடிஸம்) குறைபாடு விழிப்புணர்வு தினம்.
5 இந்தியக் கடல்
போக்குவரத்து தினம்.
7 உலக பொது சுகாதார நாள்.
10 உலக ஹோமியோபதி தினம்.
18 பாரம்பரிய தினம்.
22 பூமி தினம்.
23 உலக புத்தக தினம்.
25 மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்.
28 உலகத் தொழிலாளர் நினைவு தினம்.
29 உலக நடன தினம்.

ஏப்ரல் மாதம் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்

4 - ஸெனகல்
9 - ஜியார்ஜியா
15 - இஸ்ரேல்
17 - சிரியா
18 - ஜிம்பாப்வே
24 - அயர்லாந்து
28 - ஜப்பான்

Wednesday 5 April 2017

How to apply for new ration card?

How to Apply for new Ration Card?

இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை அரசு அலுகலகங்கள் சென்று நமக்குத் தேவையான குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டைப் போன்றவற்றைப் பெறுவது என்று கூறலாம்.

எனவே இணையதளம் மூலமாகத் தமிழகத்தில் எப்படி எளிதாக வீட்டில் இருந்தபடியே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்று இங்கு விளக்கமாக அளிக்கின்றது. இதனைப் படித்துப் பயன்பெறுங்கள்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in மூலமாக நீங்கள் எளிதாகக் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் பெறப் பதிவு செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா.

2016-ம் ஆண்டுத் தீபாவளி முதல் தமிழக அரசு இணையதளம் மூலம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in இணையளத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்த இணையதளம் மூலமாக எப்போதும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியது. இணையதளம் மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். அது எப்போது என்று செய்திகள் மூலம் அறிந்து கொண்டு பதிவு செய்வது நல்லது.

படி 1
www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற தெரிவை தேர்வு செய்யவேண்டும்.
 
பூர்த்திச் செய்யப்படக் கட்டாயமானவை

* குறிக்கப்பட்ட அனைத்துப் புலங்களும் விண்ணப்பதாரரால் பூர்த்திச் செய்யப்படவேண்டியது கட்டாயமாகும்.
புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள 'இப்போது விண்ணப்பிக்க' பொத்தானை கிளிக் செய்யவும்.

குடும்ப விவரங்கள்

விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி (கதவு எண், வீடு / அப்பார்ட்மெண்ட் பெயர் , தெரு பெயர் ) தமிழ் (அ ) ஆங்கிலத்தில் உள்ளிடவும். மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை அதனதன் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

உறுப்பினரை எப்படிச் சேர்பது

குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, 'உறுப்பினரைச் சேர்க்க' பொத்தானை அழுத்தவும் . முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
 
குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பின்வரும் விவரங்களை உள்ளிடவும்
பெயர் தமிழ் (அ ) ஆங்கிலத்தில் - கட்டாயம்
பிறந்த தேதி - கட்டாயம்
பாலினம் - கட்டாயம்
தேசிய இனம் - கட்டாயம்
உறவுமுறை - கட்டாயம்
தொழில் - கட்டாயமற்றது
மாத வருமானம் - கட்டாயம்
வாக்காளர் அட்டை எண் - கட்டாயமற்றது
ஆதார் எண் - கட்டாயம்
 
குடும்ப அட்டை வகை

குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் பொருட்களில்லா அட்டை, அரிசி அட்டை , சர்க்கரை அட்டை, காவல்துறை அட்டை.
 
குடியிருப்புச் சான்று

குடியிருப்புச் சான்றை பதிவேற்ற, குடியிருப்புச் சான்று பிரிவில் உள்ள ப்ரவ்ஸ் பொத்தானை அழுத்தவும். பின் கணினியில் தகுந்த கோப்பை தேர்ந்தெடுத்து, பதிவேற்றுப் பொத்தானை அழுத்தவும் .
குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைப்பேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, இதர.,).

   பதிவேற்றும் படிவங்கள் இருக்க வேண்டிய வடிவம்

பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று png, gif, jpeg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்.

எரிவாயு இணைப்பு விவரங்கள்

ஏற்கனவே எரிவாயு இணைப்புப் பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும். எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்க்கண்ட விவரங்களை அளிக்கவும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களும் இணைப்பு 1 பிரிவில் பூர்த்திச் செய்வது கட்டாயமாகும்.
1. எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்
2. எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
3. எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்
4. எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்
5. சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்

குறிப்பு:
குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம் இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை இணைப்பு 2 பிரிவில்; உள்ளிடவும். உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, உறுதிப்படுத்தல் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்.
 
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்
உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய் பொத்தானை கிளிக் செய்யவும். விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும்.
இந்த எண் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியப் பயன்படுத்தப்படும் மேலும் எதிர்காலப் பயன்பாட்டிற்கும் உதவும்.

ஆதார் அட்டை

இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய (UIDAI) இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த ஆதாரை பொது விநியோகத் திட்ட (PDS) பயன்பாட்டில் பதிவேற்றம் செய்தால் அந்தக் கோப்பின் பெயர் ஆதார் அட்டையில் உள்ள முகவரியின் அஞ்சல் குறியீடாக இருக்க வேண்டும்.