Friday 30 December 2016

BHIM App பீம் செயலி செயல்படுவது எப்படி?

BHIM பீம் செயலி எப்படி செயல்படுகிறது?

இது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இந்த புதிய செயலியை தங்கள் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்வதோடு, பயோமெட்ரிக் பதிவுக் கருவியுடன் இணைக்க வேண்டும். இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் தனது ஆதார் எண்ணையும், எந்த வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் பதிவிட வேண்டும். விரல் ரேகையே இந்த பரிமாற்றத்திற்கான கடவுச் சொல்லாகப் பயன்படும். இதன் மூலம் ஆதார் எண் கொண்ட அனைவரும் ரொக்கமற்ற பரிமாற்றத்தை செய்ய இயலும். பொருட்களை வாங்கச் செல்லும் போது பணம் செலுத்த போன் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

இந்த செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்

இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் பிறகு பயன்பாட்டாளரின் வங்கி கணக்கையும், மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டிற்கு பிறகு நீங்கள் பீம் செயலி மூலம் உங்கள் பரிவர்த்தனையை தொடங்கலாம்.

பீம் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள்:

அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, கத்தோலிக்க சிரியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி வங்கி, பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ வங்கி, ஐடிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, கர்நாடக வங்கி, கரூர் வைசியா பாங்க், கோடக் மஹிந்திரா வங்கி, ஒரியண்டல் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆர்பிஎல்வங்கி, சௌத் இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடேட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன.

எந்த மொழிகளில் இந்த செயலி உள்ளது?

பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே உள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள பிற மாநில மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mobile hotspot பயன்படுத்துவது எப்படி?

மொபைல் hotspot ஹாட்ஸ்பாட் -ஏன்...எதற்கு...எப்படி?

ஜென் z தலைமுறை மட்டுமில்லாமல், எல்லாரும் விரும்பும் முக்கியமான ஸ்பாட் ஹாட்ஸ்பாட். மொபைல் டேட்டாவை மற்ற கேட்ஜெட்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் டெக்னாலஜியே ஹாட்ஸ்பாட். ஜியோ வந்தபின் மொபைல் மூலமாக இணையத்தை கணினியுடன் இணைப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

ஹாட்ஸ்பாட் என்பது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட பகுதியாகும். 3G, 4G சப்போர்ட் செய்யும் மொபைல் இதற்கு ஏதுவானதாக இருக்கும். இதற்கு டெத்தரிங் என்று பெயர். இதற்கு நம்முடைய மொபைலிலும், கணினியிலும் வைபை வசதி இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் தேவையில்லை.

இந்த வசதிகளை ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் மற்றும் பிளாக்பெர்ரி மொபைல்கள் வழங்குகின்றன. அனைத்து மொபைலிலும் இந்த வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில மொபைல்கள் USB கேபிள் வழியாக கணினியை இணையத்துடன் இணைக்க வழி செய்கிறது.
ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்வதற்கு முன் நம்மிடம் போதுமான அளவில் டேட்டா உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கு பாஸ்வேர்ட் போட்டு வைப்பதின் மூலம் அடுத்தவர்கள் நம்முடைய இண்டர்நெட்டை பயன்படுத்துவதை தடுக்க முடியும்.

ஆண்ட்ராய்ட் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
2.2 இயங்கு தளத்தில் இயங்கும் மொபைல் மற்றும் டேப்லட்களில் இந்த வசதி உள்ளது. இதனைக்கொண்டு 5 பேர் வரை ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்த இயலும். சுமார் இருபது மீட்டர் வரை இந்த ஹாட்ஸ்பாட் வேலை செய்யும். Settings> Wireless & Networks > Portable WiFi Hotspot சென்று க்ளிக் செய்வதின் மூலம் ஆன் செய்து பயன்படுத்தலாம்.

ஐ போன் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
ஐபோனில் இது personal hotspot என்று அழைக்கப்படுகிறது. Settings> General> Network> Personal Hotspot> WiFi Hotspot சென்று க்ளிக் செய்து பயன்படுத்தலாம்.

விண்டோஸ் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
விண்டோஸ் மொபைலில் இது internet sharing என்று அழைக்கப்படுகிறது. Start screen> App List> Settings> Internet sharing சென்று க்ளிக் செய்வதன் மூலமாக பயன்படுத்தலாம்.

பிளாக்பெர்ரி மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆன் செய்வது எப்படி ?
குறைந்த பட்சம் ஐந்து பேர் வரை இதன் மூலம் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும். Manage connections> WiFi> Mobile hotspot செல்வதின் மூலம் ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தலாம்.
ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
ஹாட்ஸ்பாட்டை ஆன் செய்யும் போது அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைலின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். விருப்பத்திற்கு ஏற்ப நம்முடைய பெயரைக்கூட வைத்துக்கொள்ளலாம்.
Security ல் நம்முடைய இணைப்பை யார் பயன்படுத்தலாம் என்பதை தீர்மானிக்கலாம். எல்லோரும் பயன்படுத்தலாம் என்றால் open என்பதை தெரிவு செய்யலாம். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமென்றால் WAP2PSK க்ளிக் செய்து பாஸ்வேர்டு போட்டுக் கொள்ளலாம்.

ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தும் போது அதிக இண்டர்நெட் தீரும் என்பதால் சில செயலிகளின் ஆட்டோ அப்டேட்ஸ்களை ஆப் செய்து வைக்க வேண்டும். இது அதிக இண்டர்நெட் பயன்பாட்டினை குறைக்கும்.
ஹாட்ஸ்பாட்டை பயன்படுத்தாத நேரங்களில் அதை அனைத்து வைப்பது நல்லது.விரைவில் பேட்டரி குறைவதை இது தடுக்கும்

Wednesday 28 December 2016

அரசுப்பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !!

        இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.

சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.

தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத் தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.

கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.

செலுத்தும் முறை :
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.

அஞ்சல் மூலம் செலுத்த :
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002

என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.

விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை :
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.

அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.

பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.

நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.

இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

எப்படி பெறுவது ?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.

இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.

விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.

பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.

கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.

# மேலும் #விவரங்களுக்கு:
உதவி  இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் http://www.stationeryprinting.tn.gov.in/
servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm
விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.

இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

Tuesday 27 December 2016

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது. எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதை ஊக்குவிக்கும் பொருட்டு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; கட்டணங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமான மக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, இவை எதுவும் இல்லாமல் டிஜிட் டல் முறையில் பணப் பரிவர்த் தனை செய்ய புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. 'ஆதார் பேமென்ட் ஆப்' என்ற பெயரில், ஆதார் எண் ணுடன் இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப் பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம் செய்யப்படு கிறது.

இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஜய் பூஷண் கூறியதாவது: நாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் முழுமையாக இணைக்கப்பட்டு விடும். எனவே, ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து வர்த் தகருக்கு பணம் செலுத்த இந்த வசதி பயன்படும்.இதன் மூலம் எந்த ஒரு வசதியுமின்றி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

வர்த்தகர் களும், 2,000 ரூபாய் செலவில், கைரேகை அடை யாள இயந்திரம் மட்டும் வாங்கினால் போதும், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். எப்படி செயல்படுகிறது? இந்த முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல் போன் இருந் தால் போதும்; பொதுமக்களுக்கு தேவை யில்லை.

அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவு இயந்திரத்தை இணைக்க வேண்டும். வாடிக்கையாளர், தன் ஆதார் எண்ணை தந்து கைரேகையை பதிவு செய்தால், அவர் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக் கிற்கு பணம் சென்று விடும்; வங்கி கணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகை பயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல் போன் இல்லாமலேயே அவரது வங்கி கணக் கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு எளிமையாக பணம் செலுத்த முடியும்.'ஸ்வைப்பிங் மிஷின்' தீவிரம்'டிஜிட்டல்' முறை பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல் மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்கள்' தயாரிப்பை விரைவுபடுத்தும் படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்தி ரங்களை உருவாக்கி வருகிறது.

Monday 26 December 2016

All pass அவசியமா? -பதிவு 3

All pass அவசியமா? -பதிவு 3
--------------------------
மாணவர்களை ஃபெயிலாக்கினால் கல்வித்தரம் உயருமென்றால் உடனடித்தேர்வுகள் எதற்கு? 

கடந்த 3 வருடங்களாக வெளியான 10ம் வகுப்பு முடிவுகளை கவனித்தால் சுமார் 90%க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். மீதி 10%க்குக் குறைவான மாணவர்களே தோல்வி அடைகின்றனர். அவ்வாறு தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனடித்தேர்வுகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் அதே கல்வியாண்டில் +1 சேர்ந்து படிப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் +2விலும் பின்பற்றப்பட்டு தேர்ச்சிபெறும் மாணவர்கள் கல்லூரியில் உடனே சேர்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது. இதே நடைமுறை பள்ளி அளவில் 9, 11 வகுப்புகளுக்கும் கூட பின்பற்றப்படுகிறது. இவை அனைத்தும் எதற்காக?  அம்மாணவர்களின் ஒரு கல்வியாண்டு வீணாகிவிடக்கூடாது என்பதற்காகத்தானே! 

கல்லூரிகளில் செமஸ்டர் முறையில் நடத்தப்படும் தேர்வுகளில் தோல்வியுற்றாலும் மாணவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு அனுமதிக்கின்றனர். இறுதியாக நடைபெறும் செமஸ்டரில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றால்கூட போதும் என்பது அனைவரும் அறிந்ததே. மிகச்சில படிப்புகளுக்கு மட்டுமே break semester என்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது அந்த செமஸ்டரை முடித்தால் மட்டுமே அடுத்த வருடப்படிப்பைத் தொடரலாம்.

இவ்வாறு 9, 10, 11, 12 வகுப்புகளிலும்,  கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கே தேர்வில் தோல்வி என்பது அவர்களின் காலத்தையும், வாழ்க்கையையும் வீணாக்கிவிடக்கூடாது என உடனடித்தேர்வு முறை உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படும்போது 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேர்வில் தோல்வி என்பதும் அதற்காக அவர்களின் படிப்பை வருடக்கணக்கில் வீணாக்கலாம் என்பதும் எப்படி சரியான முடிவாக இருக்க முடியும்? நிச்சயம் 5ம் வகுப்பு வரை மட்டும் தேர்ச்சி என்பது சரியான முடிவு கிடையாது. கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டவில்லை என்றால் அதை சரிசெய்து ஓடச்செய்ய வேண்டும். மாறாக கடிகாரத்தை நிறுத்தி வைப்பதால் அது சரியாகிவிடுவதில்லை. ஏனெனில் கடிகாரத்தை நிறுத்தினால் காலம் நின்றுவிடப்போவதில்லை. காலம் அனைத்தையும் கற்றுத்தரும் மிகப்பெரும் ஆசான். பிள்ளைகள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளட்டும்,  அவர்களை சுதந்திரமாக விடுங்கள்.

முழுமையாக படித்ததற்கு நன்றி!
நண்பன் ஸ்ரீஜி

All pass அவசியமா? -பதிவு 2

All pass அவசியமா?-பதிவு2
-------------------------
பெண்கல்வியின் நிலை என்னவாகும்?

பெண்களுக்கு கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு தற்போது பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகக்குடும்பச்சூழலில் பரவலாக ஆண், பெண் பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டுவது பெற்றோர்களிடம் காணப்பட்டாலும் குறைந்தது பள்ளிக்கல்வியை மட்டுமாவது பெண்பிள்ளைகள் முடித்துவிடட்டும் என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.
'பத்தாவது மட்டுமாவது படிச்சிடட்டும்', '+2 பாஸ் பண்ணா போதும் ' என்பதைத் தாண்டி தற்போதுதான் 'பொண்ணு ஒரு டிகிரி முடிச்சிரட்டும் அப்புறம் கல்யாணத்தை வைச்சுக்கலாம்' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வும் ஒரே நாளில் ஏற்பட்டுவிடவில்லை.

குழந்தை திருமணத்தடைச் சட்டம், 18வயது நிறைவடைந்த பின்பே திருமணம், 14வயது வரை கட்டாயக்கல்வி சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்கள் வாயிலாகவும், மாணவிகள் ஊக்கத்தொகை, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் வாயிலாகவும் பெண்கல்வியின் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் இப்போது 5ம் வகுப்புக்கு பிறகு தேர்ச்சி கட்டாயமில்லை என்றானால் கல்வியில் பின்தங்கிய மாணவிகள் 6, 7, 8 வகுப்புகளிலேயே 2, 3 வருடங்கள் தோல்வி அடைந்தால் அம்மாணவிகளின் நிலை என்னவாகும்? இவளுக்கு படிப்பே வர லை! எனத்தூற்றும் அவளுடைய பெற்றோரையும் வீட்டினரையும் அம்மாணவி எப்படி எதிர்கொள்வாள்?  பத்தாவது முடிக்கும் முன்பே அவளுக்கு 18 வயதாகிவிட்டால் பெற்றோர்கள் தொடர்ந்து படிக்க வைக்க நினைப்பார்களா? அல்லது திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என்று நினைப்பார்களா?  தற்போதைய நிலையில் 8ம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி என்பதால் 15வயதில்  10ம் வகுப்பை எட்டிவிடுகிறார்கள். பொதுத்தேர்வைக் கடந்து விட்டால் +2 என்பது கைக்கெட்டிய தூரம்தான். எனவே பழைய நிலையைத் தொடர்வதே பெண்கல்விக்கு சிறந்த வழி!

பல நூற்றாண்டு பெண்ணடிமைத்தனத்தை மீறி பலகட்ட  போராட்டங்களுக்குப் பிறகு பள்ளிகளின் படிகளைத்தாண்டி கல்லூரிகளின் வாசலில் கால்வைக்கத் தொடங்கியிருக்கும் பெண்களுக்கான வாசலை அடைக்கும் சட்டம் இது. எப்படியாவது ஆண்பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும்போதும், குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்படும்போதும் அதற்காக முதலில் பலிகடா ஆக்குவது அக்குடும்பப்பெண்பிள்ளைகளின் கல்வியைத்தான். அனைத்து  குடும்பங்களிலும் குறிப்பாக சில மதம் மற்றும் சாதிப்பிரிவுகளிலும் இன்றளவும் பெண்குழந்தைகளின் படிப்பைவிட திருமணம்தான் முக்கியம் என்ற நிலை நிலவுவதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில் மேலும் பெண்குழந்தைகளை பள்ளிப்படிப்போடு நிறுத்திவிடும் சூழ்நிலையைத்தான் இந்த 5ம் வகுப்பு வரை மட்டும் தேர்ச்சி சட்டம் உருவாக்கும். பெண்கல்வியைப் பாதுகாக்க தற்போது உள்ள 8ம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி சட்டமே தொடர வேண்டும். பெண்கல்வி அவசியமென்று விரும்புபவர்கள் நிச்சயம் இச்சட்டதிருத்தத்தை எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் பள்ளி&கல்லூரிக்கல்வியில் பெண்களின் நிலை கேள்விக்குள்ளாகும்?

முழுமையாக படித்ததற்கு நன்றி!

நண்பன் ஸ்ரீஜி