Tuesday 28 June 2016

இராணுவ பயிற்சி நிலையங்கள்

இந்திய இராணுவ முக்கிய பயிற்சி நிலையங்கள்:-
🚀 இந்திய இராணுவ அகாடமி - டேராடூன்
🚀 இந்திய இராணுவ போலீஸ் பள்ளி - பைசாபாத்
🚀 பாதுகாப்பு பணியாளர்கள் கல்லூரி - வெலிங்டன்
🚀 இராணுவ விளையாட்டு பயிற்சி கல்லூரி - பூனா
🚀 ஆயுதப்பிரிவு மருத்துவ கல்லூரி - பூனா
🚀 இந்திய இராணுவ கல்லூரி - டேராடூன்
🚀 பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி - செகிந்திராபாத்
🚀 இயந்திர பொறியியல் கல்லூரி - கிர்கி
🚀 இராணுவ இசைப் பள்ளி - பஞ்சிருத்தி

ஆங்கிலேய பிரபுக்கள்


பிரபுக்களின் முக்கிய பங்குகள்:-
🌹 நிலையான நில வரி திட்டம் - காரன்வாலிஸ் பிரபு
🌹 இரும்பு பாதை திட்டம் - டல்ஹௌசி பிரபு
🌹 தபால் முறை - டல்ஹௌசி பிரபு
🌹 பஞ்ச நிவாரண குழு - கர்சன் பிரபு
🌹 தொழிற்சாலை சட்டம் - ரிப்பன் பிரபு
🌹 புராதன பாதுகாப்பு சட்டம் - கர்சன் பிரபு
🌹 இந்திய ஆயுத சட்டம் - லிட்டன் பிரபு
🌹 விதவை மறுமணம் சட்டம் - டல்ஹௌசி பிரபு
🌹இந்திய பல்கலைக்கழக சட்டம் - கர்சன் பிரபு
🌹 இந்திய கவுன்சில் சட்டம் - கானிங்

நேரு இடைக்கால அரசின் உறுப்பினர்கள்


ஜவஹர்லால் நேரு அவையில் இருந்த முதல் 14 உறுப்பினர்கள் இடைக்கால அரசு:-

காங்கிரஸ் உறுப்பினர்கள் - 9
🌾 பிரதமர் - ஜவஹர்லால் நேரு
🌾 உள்துறை மற்றும் செய்தி ஒளிபரப்பு - வல்லபாய் படேல்
🌾 பாதுகாப்பு - பல்தேவ் சிங்
🌾 தொழிற்சாலை - ஜான் மத்தாய்
🌾 கல்வி - ராஜாஜி
🌾 சுரங்கம் மற்றும் மின்சாரம் - C. H. பாபா
🌾 உணவு மற்றும் வேளாண்மை - ராஜேந்திர பிரசாத்
🌾 ரயில்வே - ஆசஃப் அலி
🌾 தொழிலாளர் நலம் - ஜெகஜுவன் ராம்

முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் - 5
🌾 நிதி - லியாகத் அலிகான்
🌾 வர்த்தகம் - கூ.கூ. சுந்திரிகார்
🌾 தகவல் தொடர்பு - அப்துர் ரப்நிஷ்டார்
🌾 நலவாழ்வு (மருத்துவம்) - கஸன்ஃபர் அலிகான்
🌾 சட்டம் - ஜோகேந்திரநாம் மண்டல்

இலக்கணம் வகைகள்

இலக்கணம் - எத்தனை வகைகள்:-

🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் - 30
🌷சார்பெழுத்துகள் - 10
🌷சுட்டெழுத்துகள் - 3
🌷இலக்கண வகை சொற்கள் - 4
🌷பெயர்ச் சொற்கள் - 6
🌷வேற்றுமை உருபுகள் - 8
🌷போலிகள் - 3
🌷இடம் - 3
🌷நிலம் - 5
🌷சுவை - 6
🌷மெய்ப்பாடுகள் - 8
🌷பதம் - 2
🌷பகாபதம் - 4
🌷பகுபதம் - 6
🌷உறுதிப்பொருள்கள் - 4
🌷தொகை நிலைத்தொடர்கள் - 6
🌷தொகா நிலைத்தொடர்கள் - 9
🌷பருவங்கள் (மலர்) - 7
🌷புணர்ச்சி - 2
🌷விகாரப் புணர்ச்சி - 3
🌷செய்யுள் உறுப்புகள் - 6
🌷பா வகைகள் - 4
🌷அசை - 2
🌷அளபடை - 2
🌷உயிரளபெடை - 3
🌷ஆகுபெயர் - 16
🌷வழாநிலை - 6
🌷வழுநிலை - 7
🌷பொருள்கோள் - 8
🌷தளை - 7
🌷அடி - 5
🌷தொடை - 8
🌷மோனை - 7
🌷மொழிகள் - 3
🌷வினா - 6
🌷விடை - 8
🌷புறத்திணைகள் - 12
🌷வெண்பா - 6
🌷ஆசிரியப்பா - 4
🌷தொழிற்பெயர் - 2

நோய்கள் பாதிக்கும் பகுதி

நோய்கள் பாதிக்கும் பகுதி:-

🍄 எய்ட்ஸ் - உடலில் வெள்ளை இரத்த செல்கள்

🍄 ஆந்த்ரிட்டிஸ் - மூட்டுப்பகுதிகள்

🍄 ஆஸ்துமா - மார்புப் பகுதியில் உள்ள தசைகள்

🍄 கேட்ராக்ட் (கண்புரை) - கண்

🍄 கண்ஜன்டிவிடிஸ் - கண்

🍄 குளுக்கோமா - கண்

🍄 நீரழிவு நோய் (டயப்டீஸ் மெல்லிடஸ்) - கணையம் மற்றும் இரத்தம்

🍄 டெர்மாடிடிஸ் - தோல்

🍄 தொண்டை அடைப்பான் (டிப்திரியா) - தொண்டை

🍄 டிமென்டிலா - மூளை

🍄 எக்ஸிமா - தொல்

🍄 காய்டர் (முன்கழுத்துக் கழலை) - தைராய்டு சுரப்பி

🍄 ஹெப்பாடிடிஸ் - கல்லீரல்

🍄 மஞ்சள் காமாலை - கல்லீரல்

🍄 மலேரியா - மண்ணீரல்

🍄 மெனின்ஜிடிஸ் - மூளை

🍄 ஒட்டிஸ் - காது

🍄 பக்கவாதம் - நரம்பு மண்டலம் நிணநீர்

🍄 இளம்பிள்ளை வாதம் (போலியோ) - நரம்பு மண்டலம்

🍄 பயோரியா - பற்கள், ஈறுகள்

🍄 ப்ளீரிஸி - நுரையீரல்

🍄 ரூமாட்டிஸம் (மூட்டுவாதம்) - மூட்டுகள்

🍄 நிமோனியா - நுரையீரல்

🍄 டைஃபாய்டு - குடல்

🍄 காசநோய் (டியூபர் குளோசிஸ்) - நுரையீரல்

🍄 டான்ஸிடைட்டீஸ் - டான்சில்ஸ் சுரப்பி

🍄 மூச்சுக் குழாய் அழற்சி - நுரையீரல்

🍄 லூகிமீயா - இரத்தம்

🍄 வெறிநாய் கடி (ரேபிஸ்) - மூளை

🍄 கணை நோய் (ரிக்கெட்ஸ்) - எலும்பு

Monday 27 June 2016

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் திட்டம்

 பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:

1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 

2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை. வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும்உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

 கடன் வரம்பு:

அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும். யாரெல்லாம் கடன் பெறலாம்?: சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். 

கடனின் பல்வேறு பிரிவுகள்: 
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின்அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும். 
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று. 
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு. 
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம். 
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலானமனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை. 
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கிமூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம். 
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பம்: வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும். 
* மனை வரைபடம் 
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் ) 
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு 
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று 
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று 
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம் 

கடன் ஏற்பளிப்பு: மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும். இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும். ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும். 

கடன் பிடித்தம்: 

ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்;பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும். இருபது ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும். 

காப்பீடு: 

வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப்பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

சிறப்பு குடும்ப நலத்திட்டம்: 

வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர்இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும். 

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின்அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்

Saturday 25 June 2016

Animal gender names

1) Donkey (கழுதை) - Male (ஆண்): Jack, Female (பெண்): Jenny, Child: Foal

2) Bear (கரடி)- Male (ஆண்): Boar, Female (பெண்): Sow, Child: Cub

3) Cat (பூனை)- Male (ஆண்): Tom, Female (பெண்): Queen, Child: Kitten

4) Cattle (ஆடமாடுகள்)- Male (ஆண்): Bull, Female (பெண்): Cow, Child: Calf

5) Chicken (கோழி)- Male (ஆண்): Rooster or cock, Female (பெண்): Hen, Child: Chick

6) Deer (மான்)- Male (ஆண்): Buck or stag, Female (பெண்): Doe, Child: Fawn

7) Dog (நாய்)- Male (ஆண்): Dog, Female (பெண்): Bitch, Child: Pup

8) Duck (வாத்து)- Male (ஆண்): Drake, Female (பெண்): Duck, Child: Duckling

9) Elephant (யானை)- Male (ஆண்): Bull, Female (பெண்): Cow, Child: Calf

10) Fox (நரி)- Male (ஆண்): Dog, Female (பெண்): Vixen, Child: Cub

11) Goose (வாத்து)- Male (ஆண்): Gander, Female (பெண்): Goose, Child: Gosling

12) Horse (குதிரை)- Male (ஆண்): Stallion, Female (பெண்): Mare, Child: Foal

13) Lion (சிங்கம்)- Male (ஆண்): Lion, Female (பெண்): Lioness, Child: Cub

14) Rabbit (முயல்)- Male (ஆண்): Buck, Female (பெண்): Doe, Child: Bunny

15) Sheep (செம்மறி ஆடு)- Male (ஆண்): Ram, Female (பெண்): Ewe, Child: Lamb

16) Swan (அன்ன பறவை)- Male (ஆண்): Cob, Female (பெண்): Pen, Child: Cygnet

17) Pig (பன்றி)- Male (ஆண்): Boar, Female (பெண்): Sow, Child: Piglet

18) Tiger (புலி)- Male (ஆண்): Tiger, Female (பெண்): Tigress, Child: Cub

19) Whale (திமிங்கலம்)- Male (ஆண்): Bull, Female (பெண்): Cow, Child: Calf

20) Wolf (ஓநாய்)- Male (ஆண்): Dog, Female (பெண்): Bitch, Child: Pup

21) Goat (வெள்ளாடு)- Male (ஆண்): buck, billy, Female (பெண்): doe, nanny, Child: kid

Tuesday 14 June 2016

அரசாணை DOB சான்று வயதுக்குரிய வகுப்பு

குழந்தை பிறப்பு சான்று அடிப்படையில் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசாணை:

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்.
G.O.M.S.NO.165|09.12.2004.
G.O.M.S.NO.189|12.07.2010

Friday 3 June 2016

80 C வருமான வரி விலக்கு

நீங்கள் வருமான வரியில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? : 9 வரி சேமிப்பு முதலீடுகள்

வருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...

இதோ உங்களுக்குத்தான் இந்த 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு.  பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...

1. பொது வருங்கால வைப்பு நிதிஇது ஒரு பெரிய நீண்ட கால வரி சேமிப்பு முதலீடு ஆகும். இந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீதான வட்டி வருமானம் மற்றும் முதிர்வு பெறப்பட்ட தொகை ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு உண்டு.

2. ஈக்விட்டி லிங்க்டு  சேமிப்பு திட்டம்

இந்த முதலீடு திட்டத்தில்  ஒரு நிதி ஆண்டில்  அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம் வரி விலக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் செயல்பாடு பொறுத்து ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வட்டி விகிதம் மற்றும் முதலீடு முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

3. நிலையான வைப்புத் தொகை

நிலையான வைப்புத் தொகை பிரபலமான மற்றொரு வரி சேமிப்பு முதலீடாகும். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களிடையே நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதம் வேறுபடும். குறைந்தபட்ச 5 ஆண்டு கால வைப்புத் தொகைக்கு வரி விலக்குஅதிகபட்ச  வரி விலக்கு ரூ .1.5 லட்சம் ஆகும். வட்டி மற்றும் முதிர்வு தொகை வரிவிதிப்புக்கு உட்பட்டதே.

4. என்.எஸ்.சி. - தேசிய சேமிப்பு சான்றிதழ்

என்எஸ்சி என்பது இந்திய அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள வரி சேமிப்பு முதலீடு ஆகும். இது ஒரு 5 ஆண்டு திட்டம். இந்த முதலீட்டிற்கும் வரி விலக்கு உண்டு. எனினும் இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டி வரி விதிப்பிற்குட்பட்டதே.

5. ஊழியர் சேமநல நிதியம்

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த முதலீடு 12. சதவீதம் ஊழியர்களின் அடைப்படை சம்பளத்தில் இருந்தும், மேலும் 12 சதவீதம் வேலை அளித்த நிறுவனத்தாரும் செலுத்த வேண்டும். இந்த தொகை முதிர்வின் போது பெறப்படும் வட்டிக்கு வரி விலக்குஉண்டு.

6. ஆயுள் காப்பீடு

வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி இன் கீழ் மிகவும் பிரபலமான வரி சேமிப்பு முதலீட்டு திட்டம் ஆயுள் காப்பீடு. ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது. முதலீட்டு தொகை முதிர்வின் போதோ அல்லது பாலிசிதாரர் இறப்புக்குப் பின் வழங்கப்படும் தொகைக்கோ வரி விதிக்கப்படுவதில்லை. இதுதவிர ஆயுள் காப்பீடு மூலமாக ஒருவரது வாழ்வில் சேமிப்பு நலன்கள் பலவும் கிடைக்க உதவுகிறது.

7. யூலிப் (யூனிட் காப்பீட்டு திட்டம்)

யூலிப் ஒரு தனிச் சிறப்பு மிக்க கூட்டு காப்பீட்டு திட்டமாகும். இதில் வருடத்திற்கு ரூ 1.5 லட்சம் வரி சேமிப்பு வழங்கப்படுகிறது.  நாம் செலுத்திய பிரீமியம் காப்பீடு மற்றும் முதலீடு என பிரித்து வழங்கப்படுகிறது.முதிர்ச்சியில் பெறப்படும் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.

8. என்.பி.எஸ். (தேசிய ஓய்வூதிய சிஸ்டம்)

தேசிய ஓய்வூதிய அமைப்பு ஒரு கூடுதல் வரி சேமிப்பு முதலீடு ஆகும். இது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் ஓய்வு காலத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதா.  இடையில் திரும்ப பெற கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில்  அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை வருமான வரி கழிக்கப்படும். எனினும் வேலை வழங்கிய நிறுவனம் இந்த கணக்கில் பங்களிப்பு செய்தால் எந்த வரம்பும் இல்லாமல் வரி விலக்கு இருக்கும்.

9. சுகன்யா சம்ரிதி யோஜனா

பெறோர்கள் அல்லது பாதுகாப்பாளர்களால் பெண்குழந்தைகளுக்கு செலுத்தப்படும் செல்வமகள் சேமிப்புதிட்டமாகும். பெண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் எந்த நேரத்திலும் இந்த கணக்கை தொடங்கலாம். மத்திய அரசு 10-வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒரு நிதியாண்டில் 1.50,000 ரூபாய் வரை இத்திட்டத்தில் சேமிக்கலாம். தொகை முதிர்வின் போது வழங்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.

🙏🙏🙏🙏🙏🙏🙏

வருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது ஜூன் 1முதல் அமல்

வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ.30 ஆயிரம்வரை எடுத்தால், வரி பிடித்தம் கிடையாது என்ற நடைமுறை இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறை  (ஜூன் 1–ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.