Friday 13 May 2016

பட்டா

பட்டா வாங்குவது எதற்காக ?

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர்அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன்வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக்கூடாது. பத்திரம் தான் நம் கைக்குகிடைத்துவிட்டதே இனி சொத்துநமக்குத்தான் சொந்தம் என்றுநினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவதுமிக அவசியம். அதிலும் ஒருவரிடம்இருந்து சொத்து முழுவதையும்வாங்காமல் ஒரு பகுதியைமட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டாபெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிடவேண்டும்.

பட்டா பெயர் மாற்றம்;

ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியைமட்டும் விற்பனை செய்து இருப்பதால்,பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம்வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெறவேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்றுபெயர். இந்த பட்டாவை உடனே பெறுவதுநல்லது. ஏனெனில் பட்டாவுக்குவிண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால்நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்துஉரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்துபட்டா இருக்கும் என்பதால், சிலபிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டாபெறாமல் இருந்தால், அவர் தன்னுடையபட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும்உரிமை கொண்டாட நேரிடலாம். அவர்வேறொருவருக்கு சொத்தை விற்பனைசெய்வதாக இருந்தாலும், அதன் மூலம்உங்களுக்கு பிரச்சினை வரலாம். அதாவதுநீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல்இருப்பதால், தன்னுடைய பட்டாவைசொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்துமுழு சொத்தும் தனக்குரியது! என்றுசொல்லலாம்.

உட்பிரிவு பட்டா:

அதன் மூலம் உங்களிடம் சொத்துவிற்பனை செய்யப்பட்ட விஷயத்தைமறைக்கலாம். அல்லது நீங்கள்வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும்சேர்த்து மற்றவருக்கு விற்றுவிடமுயற்சிக்கலாம். அப்படி விற்பனைநடந்துவிட்டால் சொத்தை வாங்கிஇருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும்.நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதுஅவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும்.அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவுபட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்தசொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுவிடும்.

உதாரணமாக சர்வே எண் 50/1–ல்அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள்ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால்,பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வேஎண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவுசெய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும்.அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏஅடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பிஅடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும்பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும்,நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனிதனியாக பட்டா கொடுக்கப்படும்.

கவனமாக இருக்க வேண்டும்:

இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை,வரைபடம் போன்றவை மாறுபடும். புதியஉட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண்வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும்.அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள்எல்லைப்பகுதிகள் வரையறைசெய்யப்பட்டு இருக்கும். அதனால் உங்கள்சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம்வந்துவிடும். அதனால் சொத்தின் ஒருபகுதியை விற்பனை செய்த உரிமையாளர்முழு சொத்துக்கும் உரிமைகொண்டாடுவது தவிர்க்கப்படும்.

அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாகவந்த சொத்தை வாங்குவதாக இருந்தால்பட்டா விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். அவர் பெயரில்தான் பட்டாஇருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள்எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர்மாற்றம் செய்ய முடியும்.

காலம் தாழ்த்தக்கூடாது:

அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலைஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்தசொத்துக்கு அவர் பட்டா வாங்காமல்இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள்அனைவரும் உரிமை கொண்டாடும்விதத்தில் பழைய பட்டா இருக்கும். அதில்இருந்து அவர் தனியாக தன்னுடையசொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்தசொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்கவேண்டும். அப்போது தான் சொத்தைகிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில்இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யசுலபமாக இருக்கும்.

அப்படி அல்லாமல் பாகப்பிரிவினைஅடிப்படையில் பட்டா வாங்காமல்இருந்தால் அத்தகைய சொத்தைவாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும்பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம்என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தைவிற்பனை செய்தவர் ஒருவேளைஇறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும்பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதுசிக்கலாகி விடும். அவர்களுடையவாரிசுகளின் உதவியை நாடவேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம்செய்வதும் சிக்கலான விஷயமாகவேஅமையும். எனவே கிரயப்பத்திரம்வாங்கியதும் உடனடியாக உட்பிரிவுபட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவதுநல்லது.

No comments:

Post a Comment